ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Paadal

  • 1. குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
    குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
    குருடுங் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
    குருடுங் குருடும் குழிவிழு மாறே.
  • 2. மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி
    நினைப்பின் அதனில் நிழலையும் காணார்
    வினைப்பயன் போக விளக்கியும் கொள்ளார்
    புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே.
  • 3. ஏயெனின் என்என மாட்டார் பிரசைகள்
    வாய்முலை பெய்ய மதுரம்நின் றூறிடுந்
    தாய்முலை யாவ தறியார் தமருளோர்
    ஊனிலை செய்யும் உருவிலி தானே.
  • 4.  வாயொன்று சொல்ல மனமொன்று சிந்திக்க
    நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்
    தீயென்றிங் குன்னைத் தெளிவன் தெளிந்தபின்
    பேயென்றிங் கென்னைப் பிறர்தெளி யாரே.
  • 5. பஞ்சத் துரோகத்திப் பாதகர் தன்மையும்
    அஞ்சச் சமையத்தோர் வேந்தன் அருந்தண்டம்
    விஞ்சச்செய் திப்புவி வேறுசெய் யாவிடின்
    பஞ்சத்து ளாய்ப்புவி முற்றும்பா ழாகுமே.
  • 6. தவத்திடை நின்றவர் தாமுன்னும் கன்மம்
    சிவத்திடை நின்றது தேவர் அறியார்
    தவத்திடை நின்றறி யாதவர்க் கெல்லாம்
    பவத்திடை நின்றதோர் பாடது வாமே.
  • 7. விடிவ தறியார் வெளிகாண மாட்டார்
    விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார்
    கடியதோர் ஊன்இமை கட்டுமின் காண்மின்
    விடியாமை காக்கும் விளக்கது வாமே.
  • 8. வைத்த பசுபாசம் மாற்றும் நெறிவைகிப்
    பெத்தம் அறமுத்த னாகிப் பிறழ்வுற்றுத்
    தத்துவம் முன்னித் தலைப்படா தவ்வாறு
    பித்தான சீடனுக் கீயப் பெறாதானே.
  • 9. மன்னும் மலம்ஐந்தும் மாற்றும் வகைஓரான்
    துன்னிய காமாதி தோயும் தொழில் நீங்கான்
    பின்னிய பொய்யன் பிறப்பிறப் பஞ்சாதான்
    அன்னிய னாவான் அதற்சீட னாமே.