
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 13. அபக்குவன்
பதிகங்கள்

பஞ்சத் துரோகத்திப் பாதகர் தன்மையும்
அஞ்சச் சமையத்தோர் வேந்தன் அருந்தண்டம்
விஞ்சச்செய் திப்புவி வேறுசெய் யாவிடின்
பஞ்சத்து ளாய்ப்புவி முற்றும்பா ழாகுமே.
English Meaning:
Banish False DisciplesThese reprobates of the five deadly sins
Full deserve the pious ruler`s punishment severe;
When he fails and banishes them not
The land to fell famine falls a prey.
Tamil Meaning:
பஞ்சமா பாதகத்தோடு ஓத்த, வாயொன்று சொல்ல, மனம் ஒன்று சிந்திக்க, மெய்யொன்று செய்தலாகிய இப் பாதகத்தைச் செய்வோரையும் அரசன் அவ்வமையம் பார்த்து யாவரும் அஞ்சும்படி பொறுத்தற்கரிய தண்டனையை மிகச் செய்து திருத்தாவிடின், அவனது நாடு பஞ்சத்துட்பட்டு வருந்திப் பின் உருவும் அழிந்துவிடும்.Special Remark:
பாதகத்தை இங்கு, `துரோகம்` என்றார். `மாபாதம் ஐந்து இவை` என்பது மேற் கூறப்பட்டது. l ``துரோகத்து`` என்னும் உவமம் ``பாதகர்`` என்பதன் முதனிலையோடு முடிந்தது. `துரோகத்திப் பாதகர் தம்மை` என்றாராயினும், `துரோகத்துப் பாதகர் இவர்தம்மை` என்றலே கருத்தென்க. உம்மை, மேல் முதல் தந்திரத்தில் `அரசாட்சி முறை` அதிகாரத்தில் அரசனால் தண்டிக்கப்படத் தக்கவராகக் கூறப் பட்டவரைத் தழுவி நின்று. ``விஞ்சை`` என்றது, செயலால் நல்லராய்த் தோன்றுதல் பற்றிக் கண்ணோடி அளவிற் குறையச் செய்யாது என்றதாம். வேறுசெய்தல் - திருத்துதல்.இதனால், அபக்குவராயுள்ளார் பக்குவர்போல ஓழுகுதல் பல தீமைக்கு ஏதுவாதல் நோக்கிக் கடியப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage