ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 13. அபக்குவன்

பதிகங்கள்

Photo

வைத்த பசுபாசம் மாற்றும் நெறிவைகிப்
பெத்தம் அறமுத்த னாகிப் பிறழ்வுற்றுத்
தத்துவம் முன்னித் தலைப்படா தவ்வாறு
பித்தான சீடனுக் கீயப் பெறாதானே.

English Meaning:
No Grace for false Disciple

He thinks not of sundering soul`s fetters,
Nor of annihilating world`s desires;
He strives not to Mukti attain,
Nor aught of Tattvas and the way ahead;
But takes a wayward course,
A disciple exceeding mad;
To him is not the gift of Grace granted.
Tamil Meaning:
`உயிர்களையே பற்றுதற்கு உரியன` என நூல்களில் சொல்லிவைக்கப்பட்ட, பசுத்துவத்தைத் தரும் பாசத்தை அகற்றுவ தாகிய தவநெறியில்நின்று, அதனால் அப்பாசங்களின் கட்டு நெகிழ, வீடு பெறும் பக்குவத்தை எய்தி, முன் சென்ற உலகியலினின் றும் மாறி மெய்ந்நெறியைப் பற்றி, மெய்ப் பொருளையே அடைய விரும்பி அதற்கேற்ற முயற்சியால் அதனை அடையாது, மேற்கூறியவாறு விடிவதறியாப் பேதைமை மிக்கார்க்கு மேற்கூறிய விளக்கு நல்லாசிரியரால் ஈயப்படா.
Special Remark:
``வைகி`` என்பது முதலாகப் போந்த எச்சங்கள் பக்குவம் படிமுறையான் முதிர்ந்து வருமாற்றை உணர்த்தி நின்றன. முன்னை மந்திரத்தில் ஒட்டணி வகையாற் கூறியதனையே இங்கு, ``அவ்வாறு`` எனச் சுட்டினார். பித்துப் போலுதல் பற்றிப் பேதைமையை, ``பித்து`` என்றார். பெறுவாரது பன்மையால் விளக்கும் பலவாம் ஆதலின் ``ஈயப்பெறா`` எனப் பன்மையாக ஓதினார். `தானே` என்பது பாடமன்று.
இதனால், அபக்குவர்க்கு ஞானமும், ஞானத்தின் பயனும் கிடையாமை கூறப்பட்டது. ``ஈயப் பெறா`` என்பது ஆசிரிய ராயினார்க்கும் அறிவித்தாம்.