ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 13. அபக்குவன்

பதிகங்கள்

Photo

மன்னும் மலம்ஐந்தும் மாற்றும் வகைஓரான்
துன்னிய காமாதி தோயும் தொழில் நீங்கான்
பின்னிய பொய்யன் பிறப்பிறப் பஞ்சாதான்
அன்னிய னாவான் அதற்சீட னாமே.

English Meaning:
Other blemishes of false Disciples

He thinks not of ending Fetters Five
Nor of deliverance from incessant lust immersed;
A mean liar, fears neither birth nor death
Verily, a stranger to Grace shall be
He, the disciple false.
Tamil Meaning:
இதன் பொருள் வெளிப்படை.
Special Remark:
``ஓரான்`` என்றது, `ஓரும் முயற்சியிலன்` என்றவாறு, காமாதி `காமம், வெகுளி மயக்கம்` என்பன. `இவற்றில் தோயும் தொழில்` என்க. தோய்தல் - மூழ்குதல். பின்னுதல் - கட்டிச் சொல்லுதல். அன்னியன் - ஞானத்திற்கு அயலானவன் என்க. ``ஓரான்`` முதலிய நான்கும் முற்றெச்சங்களாய் நின்று ``அன்னிய னாவன்`` என்னும் வினைப்பெயர் பயனிலை கொள்ள, அஃது எழுவா யாயிற்று. `ஓராமை முதலிய நான்கனுள் ஒன்றேயே உடையோனும், பலவற்றையுடையோனும் அன்னியனாவன்` என்க.
இதனால், அபக்குவிகளது இயல்புகள் கூறப்பட்டன. இறுதிக் கண் ``அசற்சீடனாம்`` என்றதனால் இஃது ஆசிரியராயினாரை நோக் கிற்றாய், `பக்குவம் எய்தாதாரையும், எய்தினாரையும் அறியுமாறு கூறிப்பக்குவம் எய்தாதார்க்கு ஞானத்தை உணர்த்துதலும், எய்தினார்க்கு அதனை உணர்த்தாது ஒழிதலும் செய்யற்க` என உணர்த்தியதாயிற்று.