ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 41. பத்தியுடைமை

பதிகங்கள்

Photo

நிலைபெற கேடென்று முன்னே படைத்த
தலைவனை நாடித் தயங்குமென் உள்ளம்
மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும்
உலையுளும் உள்ளத்தும் ஊழ்த்துநின் றானே.

English Meaning:
Seek Him Within and Without

This birth is a lasting curse to me;
And so, I seek Him in drooping heart
In Mountain and Sky
Within and without;
And in Fire within too;
Thus in holy thought immersed,
I stood.
Tamil Meaning:
உலகனைத்தையும், `இவை சிலகாலம் நிலைபெற்றிருந்து, பின் `ஒடுங்குக` என்று சங்கற்பித்துப் படைத்த தலைவன் எங்கேயிருக்கின்றான்`` என்று அவனைக் காணத்தேடி என் உள்ளம் திகைத்தது. பின்பு அவன் தேட வேண்டாது எங்கும் நிறைந்து, உயிர்களின் புறத்தும், அவனைத்தேடித் திகைக்கும் உள்ளத்தும் `புறம், அகம்` என்னும் வேறுபாடின்றி விளங்குதலைக்கண்டு வியந்தேன்.
Special Remark:
`கெட` என்னும் வியங்கோள்முற்று ஈறுதொக்கு, முதல் நீண்டு `கேட்` என நின்றது. அது, `கேடு` என்னும் முதனிலை திரிந்த தொழிற்பெயரன்று. ``தயங்கும்`` என்றது. இறந்த காலத்தில் நிகழ்கால முற்று. `எவ்விடத்தும்` என்றற்கு மலையையும், வானத்தையும் உபலக்கணமாகக் கூறினார். உலைதல் - வருந்துதல். ``உள்ளும் உள்ளத்தும்`` என்பது ஒரு சொல் நீர்மைத்தாய் நிற்க, `உலை` என்பது அதனோடு தொக்கு வினைத்தொகையாயிற்று. ஊழ்த்து நிற்றல், காண்டற்குரிய செவ்வியோடேயிருத்தல். `நின்றான்` என்றது, அதன் பயனாகிய வியப்பைக் குறித்து நின்றது.
இதனால், பத்தி செய்வார்க்குச் சிவன்தேட வேண்டாது, இருந்த இடத்தில் இருந்தே காணப்படுதல் கூறப்பட்டது.