ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 32. நவாவத்தை அபிமானி

பதிகங்கள்

Photo

சிவமான சிந்தையில் சீவன் சிதையப்
பவமான மும்மலம் பாறிப் பறிய
நவமான அந்தத்தின் நற்சிவ போதம்
தவமாம் அவையாகித் தானல்ல வாகுமே.

English Meaning:
Dawn of Sivajnana

As in the thought of Siva
Jiva merges,
The Malas Three,
That to birth gives rise,
Flee away;
At the end of avastas nine
In Siva-bodha (Awareness of Jnana);
Jiva attains that
And Himself no more is.
Tamil Meaning:
மேற்கூறிய சிவ துரியத்தில் சீவன் ``அவனே தானே ஆகிய அந்நெறி - ஏகனாகி`` நிற்றலால் `தான்` என்பதொரு முதல் இல்லையாய்விட, ``மல மாயை தன்னொடு வல்வினையின்றே ``* என்றபடி. பிறப்பிற்குக் காரணமாய் நின்ற மும்மலங்களும் அடியோடு கெட்டொழியும். ஒழியவே சீவபோதம் பராவத்தையின் இறுதியில் நிகழும் சாந்த சிவ போதமேயாம். அதனால் அந்நிலையில் அந்த சாகிய சீவன் செய்யும் செயல்களும் பிறப்பிற்கு ஏதுவாம் ஆகாமிய வினையாகாது சிவ போதத்தை நினைப்பிக்கின்ற தவங்களேயாய், மற்றும் தான் செய்தன ஆகாது சிவன் செய்தனவேயாகி விடும்.
Special Remark:
``ஆகும்`` என்பதனைப் ``போதம்` என்பதனோடும் கூட்டி, `அந்தத்தின் நிகழும் நற்சிவ போதம் ஆகும்` என்க. `தவமாம் அவையாகி` என்றதனால், `அவர் செய்யும் செயல்கள்` என்பது பெறப்பட்டது. தான் செய்யும் செயல்களைத் ``தான்`` என்றார். `தான் செய்வன அல்ல ஆகும், என்றதனால், `சிவன் செய்வன ஆகும்` என்பது தானே பெறபட்டது``. சித்தம் சிவமாக்கிச் செய்தன வேதவமாக்கும் அத்தன்`` 8 என்று அருளிச் செய்தது காண்க.
இதனால், மேற்கூறிய அபிமானப் பெயர்களுள் `பிரசாபதி` என்னும் பெயரினனாதலும் சிறப்புடைத்தாதல் கூறப்பட்டது.