ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 13. மாகேசுர பூசை

பதிகங்கள்

Photo

பகவர்க்கே தாகிலும் பற்றில ராகிப்
புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும்
முகமத்தோ டொத்துநின் றூழிதோ றூழி
அகமத்த ராகிநின் றாய்ந்தொழிந் தாரே.
வித்தக மாகிய வேடத்தர் உண்டஊண்
அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்
சித்தந் தெளிந்தவர் சேடம் பருகிடின்
முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே.

English Meaning:
Worship without Love for Siva Jnanis Leads Nowhere

With endearment none for holy ones
With pride brimming to full
They Pujas perform;
Thus through ages and ages they tried and perished,
Their faces turned like agitating churns hard,
Their hearts with egoity extreme filled.
Food for Holy Men is Food for Gods

The food the holy men partake
Is verily food for the gods,
Siva, Vishnu and Brahma;
To partake of the leavings
Of holy men that have realized Truth
Is the way sure to Mukti;
—Thus affirms our Mula in meaning unmistakable.
Tamil Meaning:
சிலர் மாகேசுரரிடத்துச் சிறிதளவும் அன்பில்லா தவராய் மாகேசுரனிடத்துச் சரண் புகுகின்ற பித்துக் கொள்ளிகளாய் அவனை மட்டும் பூசித்தலாகிய அந்த வழியிலே நெடுங்காலம் நின்று, அவனது அருள் மிகக் கிடையாத காரணம் யாதென்று ஆராய்ந்து, முடிபு காணாது இளைத்து விட்டார்கள்.
Special Remark:
``முக்கோற் பகவர்`` (அகப்பொருள் விளக்கம்) என்பது போல, ``பகவர்`` என்பது மாகேசுரரைக் குறித்தது. பண்பு - அன்பு. `பண்பு ஏதாகிலும் இலராகி` என்க. ``பூசனை`` என்றது சிறப்புப் பற்றி சிவபூசையையே குறித்தலின், புகுதல் அவனிடத்தேயாயிற்று. மத்தர் - உன்மத்தர். உண்மையை உணராது செய்தலின் ``மத்தர்`` என்றார். ``முகம்``, `வாயில்` எனப்பொருள் தந்தது. `அதனோடு` என்பது, ``அத்தோடு`` என மருவிநின்றது. `ஆகமத்தர்` என்பது, ``அகமத்தர்`` எனக் குறுகி நின்றது. ``ஒழிந்தார்`` என்றதனால் முடிவு காணாமை பெறப்பட்டது.
இதனால், `மகேசுரனை அடையவேண்டுவார் மாகேசுரரை வழிபடல் இன்றியமையாதது என்பதே ஆகமங்களின் கருத்து` என்பது கூறப்பட்டது.
இதனை அடுத்து நிற்கும் ``வித்தகமாகிய`` என்னும் பாடலும் மேற்காட்டிய, ``அத்தன் நவதீர்த்தம்`` என்னும் பாடல்போலப் பிற ரொருவரால் செய்யப்பட்டதாகவே தெரிகின்றது. இதுவும் ஒரு பிரதி யில் இல்லை. இதன் பொருள் வெளிப்படை. இது மாகேசுரர் உண்ட பின் எஞ்சிய சேடத்தை யுண்ணுதலின் சிறப்பை உணர்த்துகின்றது.