ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 9. சன்மார்க்கம்

பதிகங்கள்

Photo

தெளிவறி யாதார் சிவனை அறியார்
தெளிவறி யாதார் சீவனு மாகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே.

English Meaning:
Sanmarga Gives the Vision True

They that have true Vision none,
Shall never Siva know;
Nor shall even Jivas be;
Nor indeed Siva become;
Never, never their birth`s bondage-broken be.
Tamil Meaning:
குருவருளால் பெறப்படும் உண்மை ஞானத்தைப் பெறாதவர் சிவனது இயல்பை உணரமாட்டார், அதனால், அவர் ஆன்மலாபத்தை அடைதற்குரிய ஆன்மாவும் ஆகார். (`சடத்தோ டொப்பர்` என்பதாம்.) ஆதலின், அவர் சிவமாம் நிலையைப் பெறுதலும், அப்பேற்றால் பிறவி யற்றவராதலும் இல்லை.
Special Remark:
கேட்டுச் சிந்தித்துத் தெளிவதனையே ``தெளிவு`` என்றார். உம்மை, எச்சப்பொருட்டு.
இதனால், குருவருளாலன்றிப் பிறவாற்றாற் பெறும் ஞானங்கள் உண்மை ஞானம் அல்லவாய், நன்னெறி சன்மார்க்க மாகாதொழிதல் கூறப்பட்டது.