ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
    மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்
    புறங்கேட்டும் பொன்னுரை மேனியெம் ஈசன்
    திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே.
  • 10. வைத்துணர்ந் தான்மனத் தோடும்வாய் பேசி
    ஒத்துணர்ந் தான்உரு ஒன்றொடொன் றொவ்வா
    தச்சுழன் றாணி கலங்கினும் ஆதியை
    நச்சுணர்ந் தாற்கே நணுகலு மாமே. 
  • 2. தேவர் பிரான்றனைத் திவ்விய மூர்த்தியை
    யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
    ஓதுமின் கேண்மின் உணர்மின் உணர்ந்தபின்
    ஓதி உணர்ந்தவர் ஓங்கிநின் றாரே. 
  • 3. மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின்
    அயன்பணி கேட்ப தரன்பணி யாலே
    சிவன்பணி கேட்பவர் தேவரு மாவர்
    பயன்பணி கேட்பது பற்றது வாமே. 
  • 4. பெருமான் இவனென்று பேசி யிருக்குந்
    திருமா னுடர்பின்னைத் தேவரு மாவர்
    வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும்
    அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே. 
  • 5. ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
    பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தின்
    நேசமு மாகும் நிகழொளி யாய்நின்று
    வாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே.
  • 6. விழுப்பமும் கேள்வியும் மெய்ந்நின்ற ஞானத்
    தொழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
    வழுக்கி விழாவிடில் வானவர் கோனும்
    இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே. 
  • 7. சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல்
    செறிவால் அனுபோகஞ் சித்திக்கும் என்னில்
    குறியாத தொன்றைக் குறியாதார் தம்மை
    அறியா திருந்தார் அவராவர் அன்றே.
  • 8. உறுதுணை யாவ துயிரும் உடம்பும்
    உறுதுணை யாவ துலகுறு கேள்வி
    செறிதுணை யாவ சிவனடிச் சிந்தை
    பெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை தானே. 
  • 9. புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்
    இகழநின் றார்க்கும் இடும்பைக் கிடமா
    மகிழநின் றாதியை ஓதி உணராக்
    கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே.