ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. அன்புசிவம் இரண் டென்பர் அறிவிலார்
    அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
    அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
    அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. 
  • 10. அன்பினுள் ளான்புறத் தானுட லாயுளான்
    முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
    அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள்
    அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே. 
  • 2. பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்
    மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை
    துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப்
    பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே.
  • 3. என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
    பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்
    அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி
    என்பொன் மணியினை எய்தவொண் ணாதே.
  • 4. ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை
    ஈரம் உடையவர் காண்பார் இணையடி
    பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்
    கோர நெறிகொடு கொங்குபுக் காரே. 
  • 5. என்னன் புருக்கி இறைவனை ஏத்துமின்
    முன்னன் புருக்கி முதல்வனை நாடுமின்
    பின்னன் புருக்கிப் பெருந்தகை நந்தியும்
    தன்னன் பெனக்கே தலைநின்ற வாறே. 
  • 6. தானொரு காலம் சயம்புவென் றேத்தினும்
    வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்
    தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்
    யானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே.
  • 7. முன்படைத் தின்பம் படைத்த முதலிடை
    அன்படைத் தெம்பெரு மானை அறிகிலார்
    வன்படைத் திந்த அகலிடம் வாழ்வினில்
    அன்படைத் தான்தன் அகலிடத் தானே.
  • 8. கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி
    இருத்தியும் வைத்தும் இறைவஎன் றேத்தியும்
    அருத்தியுள் ஈசனை ஆரருள் வேண்டில்
    விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே. 
  • 9. நித்தலுந் துஞ்சும் பிறப்பையுஞ் செய்தவன்
    வைத்த பரிசறிந் தேயும் மனிதர்கள்
    இச்சையு ளேவைப்பர் எந்தை பிரான்என்று
    நச்சியே அண்ணலை நாடகி லாரே.