
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 21. அன்புடைமை
பதிகங்கள்

அன்பினுள் ளான்புறத் தானுட லாயுளான்
முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே.
English Meaning:
Inside Love is He; in outer Nature is He; as body also is He;The past and future is He; the Lord of Rishis is He;
The Precious One who inside Love resides,
Only those, who in Love reside, find in Him the Refuge free.
Tamil Meaning:
உலகத்தோற்றத்திற்கு முன்னும், உள்ளவனாயும் ஞானிகட்கும் முதற் குருவாயும் உள்ள இறைவன் உயிர்களின் அகத்தே அன்புருவாயும், புறத்தே பல குறிகளாயும் இருக்கின்றான். முடிவாக அவன் அன்பினுள்ளே விளங்கிப் பிறவாற்றால் அறியப் படாதவன் ஆவன். ஆதலால், அன்பில் நிற்பவர்க்கே அவன் உறு துணையாவான்.Special Remark:
இரண்டாம் அடியை முதலில் கொள்க. ``புறத்தான்`` என்பதில் ஆன், உருபு மயக்கமாக வந்த மூன்றன் உருபு. ``புறத்தான்`` எனவே, `அகத்தான்` என்பது கொள்ளப்பட்டது. ``உடல்`` என்றது, `மூர்த்தி` என்றவாறு.இதனால், `சிவபெருமானை அடைதற்கு எவ்வாற்றானும் அன்பே வாயில்` என்பது முடித்துக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage