ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 21. அன்புடைமை

பதிகங்கள்

Photo

அன்பினுள் ளான்புறத் தானுட லாயுளான்
முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே. 

English Meaning:
Inside Love is He; in outer Nature is He; as body also is He;
The past and future is He; the Lord of Rishis is He;
The Precious One who inside Love resides,
Only those, who in Love reside, find in Him the Refuge free.
Tamil Meaning:
உலகத்தோற்றத்திற்கு முன்னும், உள்ளவனாயும் ஞானிகட்கும் முதற் குருவாயும் உள்ள இறைவன் உயிர்களின் அகத்தே அன்புருவாயும், புறத்தே பல குறிகளாயும் இருக்கின்றான். முடிவாக அவன் அன்பினுள்ளே விளங்கிப் பிறவாற்றால் அறியப் படாதவன் ஆவன். ஆதலால், அன்பில் நிற்பவர்க்கே அவன் உறு துணையாவான்.
Special Remark:
இரண்டாம் அடியை முதலில் கொள்க. ``புறத்தான்`` என்பதில் ஆன், உருபு மயக்கமாக வந்த மூன்றன் உருபு. ``புறத்தான்`` எனவே, `அகத்தான்` என்பது கொள்ளப்பட்டது. ``உடல்`` என்றது, `மூர்த்தி` என்றவாறு.
இதனால், `சிவபெருமானை அடைதற்கு எவ்வாற்றானும் அன்பே வாயில்` என்பது முடித்துக் கூறப்பட்டது.