ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 21. அன்புடைமை

பதிகங்கள்

Photo

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்
அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி
என்பொன் மணியினை எய்தவொண் ணாதே.

English Meaning:
You may turn your bone to fuel, your flesh to meat,
And let them roast and sizzle to the gold-red blaze;
But unless your heart melts in the sweet ecstasy of Love,
My Lord, my Treasure-trove, you ne`er can

Tamil Meaning:
மாரியினும் பனியினும் நீர்நிலை நிற்றல், வேனிலில் ஐந்தீ நாப்பண் நிற்றல் முதலிய துணைச்செயல்களைச் செய்து உடம்பை ஒறுத்தாராயினும், முதற்செயலாகிய அன்பு செய்தல் இல்லாதார் என் தலைவனாகிய சிவபெருமானை அடைதல் இயலாது.
Special Remark:
``பொன்மணி`` என்னும் உம்மைத்தொகை உவமை யாகுபெயராயிற்று. `என்போல்` எனப் பாடம் ஓதி அதனை ``எய்த`` என்பதனோடு இயைப்பாரும், முன்னே மூன்றாம் அடியோடு இயைப் பாரும் உளர். அவர் உரையிலெல்லாம், ``மணி`` என்பது ஒன்றே சிவபெருமானை வரைந்து சுட்டாமை அறிக.
இதனால், அன்பொடு கூடாத தவம் பயன்படாது என்பது கூறப்பட்டது. படவே, கடவுட் கொள்கை இல்லாத சமயிகள் கூறும் தவம் தவமாகாமையும் பெறப்படும்.