ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Paadal

  • 1. ககாராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை
    அகாராதி ஓர் ஆ றரத்தமே போலும்
    சகாராதி ஓர்நான்கும் தாம்சுத்த வெண்மை
    ககாராதி மூவித்தை காமிய முத்தியே.
  • 10. செய்ய திருமேனி செம்பட் டுடைதானும்
    கையில் படைஅங் குசபாசத் தோடபயம்
    மெய்யில் அணிகலன் ரத்தின மாம்மேனி
    துய்ய முடியும் அவயவத் தோற்றமே.
  • 11. தோற்போர்வை நீக்கித் துதித்தடைவில் பூசித்துப்
    பாற்போ னகம்மந் திரத்தால் பயின்றேத்தி
    நாற்பால \\\"நாரதா யைசுவா கா` என்று
    சீர்ப்பாகச் சேடத்தை மாற்றியபின் சேவியே.
  • 12. சேவிப் பதன்முன்னே தேவியைஉத் வாபனத்தால்
    பாவித் திதய கமலம் பதிவித்தங்
    கியாவர்க்கு மெட்டா இயந்திர ராசனை
    நீவைத்துச் சேமி நினைந்த தருமே.
  • 2. ஓரில் இதுவே உறையும் இத் தெய்வத்தைத்
    தேரில் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்
    வாரித் திரிகோணம் மாவின்ப முத்தியும்
    தேரில் அறியும் சிவகாயந் தானே.
  • 3. ஏக பராசத்தி ஈசற்காம் அங்கமே
    ஆகம் பராவித்தை ஆம் முத்தி சித்தியே
    ஏகம் பராசத்தி யாகச் சிவன்உரு
    யோகம் பராசத்தி உண்மைஎட் டாமே.
  • 4. எட்டாகிய சத்தி எட்டாகும் யோகத்துக்
    கட்டாகும் நாதாந்தத் தெட்டும் கலப்பித்த (து)
    ஒட்டாத விந்துவும் தான்அற் றொழிந்தது
    கிட்டா தொழிந்தது கீழான மூடர்க்கே.
  • 5. ஏதும் பலமாம் இயந்திரரா சன்னடி
    ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு
    நீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச்
    சாதங் கெடச் செம்பில் சட்கோணந் தான்இடே.
  • 6. சட் கோணந் தன்னில் சிரீம்இரீம் தானிட்டு
    அக்கோணம் ஆறின் தலையில்இரீங் காரம்இட்
    டெக்கோண முஞ்சூழ் எழில்வட்டம் இட்டுப்பின்
    மிக்கீரெட் டக்கரம் அம்முதல் மேல்இடே.
  • 7. இட்ட இதழ்கள் இடைஅந் தரத்திலே
    அட்டஹவ் விட்டிட் டதன்மேலே உவ்விட்டுக்
    கிட்ட இதழ்களின் மேலே கிரோம்சிரோம்
    இட்டுவா மத் (து) ஆம் கிரோம்என் மேவிடே.
  • 8. மேவிய சக்கர மீது வலத்திலே
    கோவை யுடைய குரோம்சிரோம் என்றிட்டுத்
    தாவில் இரீங்காரத் தால்சக் கரஞ்சூழ்ந்து
    பூவை புவனா பதியைப்பின் பூசியே.
  • 9. பூசிக்கும் போது புவனா பதிதன்னை
    ஆசற் றகத்தினில் ஆவா கனம்பண்ணிப்
    பேசிப் பிராணப்பிர திட்டை யதுசெய்து
    தேசுற் றிடவே தியான மதுசெய்யே.