ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 12. புவனாபதிச் சக்கரம்

பதிகங்கள்

Photo

பூசிக்கும் போது புவனா பதிதன்னை
ஆசற் றகத்தினில் ஆவா கனம்பண்ணிப்
பேசிப் பிராணப்பிர திட்டை யதுசெய்து
தேசுற் றிடவே தியான மதுசெய்யே.

English Meaning:
How to Place the Mantra Letters in the Yantra

On the six-angled diagram
Place Srim, Hrim letters.
Above place Rim,
Describe a circle the entire diagram to encompass
And place the letters eight times two, inclusive of Aum.
Tamil Meaning:
புவனாபதி யம்மையை வழிபடும் பொழுது முதலில் மனத்தைக் காமாதி குற்றங்களின் நீங்கித் தூய்மையுடை யதாகப் பண்ணி, அகத்தில் அவளது உருவத்தை நினைவுகூர்ந்து, பின்பு வெளியில் கும்பம், (நிறை குடம்) விம்பம், (திருவுருவம்) இச் சக்கரம் என்பவைகளில், அவ்வம் மறைமொழிகளால், (மந்திரங் களால்) ஆவாகனம், (வரவழைத்தல்) தாபனம், (இருத்துதல்) சந்நிதானம், (முகநோக்கம்) சந்நிரோதனம், (வேண்டிக்கோடல்) என்பவை களால் விளக்கம் பெற நிறுத்திப்பின் உபசாரங்கள், (முகமன்கள்) பலவும் செய்து முடித்து, அவளது ஒளிமிக்க வடிவம் மனத்திலே நன்கு பொருந்தும்படி தியானித்து நில்.
Special Remark:
\\\"அகத்தில்\\\" என்பது தாப்பிசையாய் இடை நின்றது. அகத்தினில் ஆவாகனம் - நினைவுகூர்தல். புறத்தினில் ஆவாகனம் - வரைவழைத்தல். பிராணப் பிரதிட்டை - உயிர் கொடுத்து நிலைப் பித்தல். என்று, ஆவாகனம் முதலிய நான்கையும் உணர்த் திற்று. இவை புறத்திலாதல் வெளிப்படை. அதனால், இவை செய்யப்படும். இடங்களாகிய கும்பம் முதலியனவும் பெறப்பட்டன. \\\"பேசி\\\" என்பதற்குச் செயப்படுபொருள் வருவித்துக்கொள்க. \\\"பிரதிட்டை செய்து\\\" என்றே போயினாராயினும், பின்னர்ச் செய்யப் படும் உபசாரங்கள் ஆற்றலால் விளங்கும். அவை அபிடேகம், (திருமுழுக்கு) அலங்காரம், (ஒப்பனை. இஃது ஆடை, அணிகலம், சந்தனம், பூமாலை, இவைகளை அணிந்து அழகுசெய்தலாம்.) தூபம், (நறும்புகையிடுதல்) தீபம், (பல விளக்குவகை காட்டல்) நிவேதனம், (நைவேத்தியம் - படையல்கள்) அருச்சனை, (மலரிடல்) நிருத்தம், (ஆடல்) கீதம், (பாடல்) வாத்தியம், (பல்லியம்) பிரதட்சிணம், (வலம் வரல்) நமஸ்காரம், (அடிபணிதல்) பிரார்த்தனை, (வேண்டுகோள்) என்பன. `செபம்` (மந்திரம் கணித்தல்) என்பது இவற்றுடனே கொள்க. தேசு, ஆகுபெயர்.
இதனால், புவனாபதி அம்மையது வழிபாட்டு முறை கூறப் பட்டது.