ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. தானந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்
    தேனுந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்
    ஞானம் கடந்த நடம்செய்யும் நம்பிக்(கு) அங்(கு)
    ஆனந்தக் கூத்தாட ஆடரங் கானதே.
  • 2. ஆனந்தம் ஆடரங்(கு) ஆனந்தம் பாடல்கள்
    ஆனந்தம் பல்இயம் ஆனந்த வாச்சியம்
    ஆனந்தம் ஆக அகில சராசரம்
    ஆனந்தம் ஆனந்தக் கூத்தகந் தானுக்கே.
  • 3. ஒளியாம் பரமும் உளதாம் பரமும்
    அளியார் சிவகாமி யாகும் சமயக்
    களியார் பரமும் கருத்துறை அந்தத்
    தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே.
  • 4. ஆன நடமைந்(து) அகள சகளத்தன்
    ஆன நடம்ஆடி ஐங்கரு மத்தாகம்
    ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே
    தேன்மொழி பாகன் திருநடம் ஆகுமே.
  • 5. பூதாண்டம் பேதாண்டம் போகாண்டம் யோகாண்டம்
    மூதாண்ட முத்தாண்டம் மோகாண்ட தேகாண்ட
    தாகாண்டம் ஐங்கரு மத்தாண்ட தற்பரத்(து)
    ஏகாந்த மாம்பிர மாண்டத்த தென்பவே.
  • 6. வேதங்க ளாட மிகும்ஆ கமமாடக்
    கீதங்க ளாடக் கிளாண்டம் ஏழாடப்
    பூதங்க ளாடப் புவனம் முழுதாட
    நாதன்கொண் டாடினான் ஞானானந் தக்கூத்தே.
  • 7. பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்
    வேதங்கள் ஐந்தில் மிகும்ஆ கமம்ஐந்தில்
    ஓதும் கலை காலம் ஊழியுடன் அண்டப்
    போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் ஈசனே.
  • 8. தேவர் அசுரர்நரர் சித்தர்வித் யாதரர்
    மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்
    தாபதர் சாத்தர் சமயம் சராசரம்
    யாவையும் ஆடிடும் எம்இறை ஆடவே.