ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 11. சிவானந்தக் கூத்து

பதிகங்கள்

Photo

ஒளியாம் பரமும் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி யாகும் சமயக்
களியார் பரமும் கருத்துறை அந்தத்
தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே.

English Meaning:
It is End of Jnana

The Param that is Light
The Param that Jiva unites in,
The Param that is Sivakami
Who as Sakti in Grace abounds;
And the bliss of faiths all,
—Are all attained,
When Sivananda Dance witnessed,
The Dance that is the end of Knowledge Pure.
Tamil Meaning:
`உள்ளது` என வழங்கபப்டும் சத்தாதல் தன்மையும், `ஒளி` என வழங்கப்படும் சித்தாதல் தன்மையும், சமய நிலையில் `சிவகாமி` என வைத்து வணங்கப்படும் அருள் வடிவான ஆனந்த மாதல் தன்மையும் ஆகிய இம்மூன்று தன்மைகளையும் உயிர்கள் பெறுதல், சிவன் செய்யும் ஆனந்த நடனத்தை உள்ளத்தில் தெளிவாகக் கண்டு தியானிக்கும் தியானத்தினாலாம்.
Special Remark:
``பரம்`` மூன்றும் பரமாதல் தன்மை மேல் நின்றன. பரமாதல் தன்மையை உபநிடதங்கள், `சத்து சித்து, ஆனந்தம்` என மூன்றாகக் கூறும் வழக்குப்பற்றி அவற்றையே எடுத்துக் கூறினார். செய்யுள் நோக்கிச் சித்து முதற்கண் கூறப்பட்டது. `சிவகாமி` என்பது பொதுவாக, `சிவனை விரும்புவள், விரும்பச் செய்பவள்` எனப் பொருள் தரினும் உண்மையில் `காமம்` என்பது இன்பத்தைக் குறிப்பதாக `சிவகாம வல்லி` என்பதை, தன் ஆனந்தக் கொடி`l எனக் கூறுமாற்றால் அறிக. தெளிவு, இங்கு, தியானம். ``தெளிவாம் நட்டத்தின்`` என்றது, `நட்டமாம் தெளிவானதின் சத்தி` எனப் பொருள் தந்து நின்றது.
இதனால் சிவானந்தக் கூத்துப் பரமுத்தி ஆனந்தத்தைத் தருதல் கூறப்பட்டது.