ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித்
    தறிஇருந் தாற்போலத் தம்மை இருத்திச்
    சொறியினும் தாக்கினும் துண்ணென் றுணராக்
    குறிஅறி வாளர்க்குக் கூடலு மாமே.
  • 10. யோகச் சமயமே யோகம் பலஉன்னல்
    யோக விசேடமே அட்டாங்க யோகமாம்
    யோகநிர் வாணமே உற்ற பரோதயம்
    யோகாபி டேகமே ஒண்சித்தி உற்றலே.
  • 2. ஊழிதொ றூழி யுணர்ந்தவர்க் கல்லது
    ஊழிதொ றூழி உணரவுந் தானொட்டான்
    ஆழி அமரும் அரிஅயன் என்றுளார்
    ஊழி முயன்றும்ஓர் உச்சியு ளானே.
  • 3. பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்
    சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
    ஓவியம் போல உணரவல் லார்கட்கு
    நாவி அணைந்த நடுதறி ஆமே.
  • 4. உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
    கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்
    சிந்தை உறவே தெளிந்திருள் நீங்கினால்
    முந்தைப் பிறவி மூலவித் தாழுமே.
  • 5. எழுத்தொடு பாடலும் எண்ணெண் கலையும்
    பழித்தலைப் பாசப் பிறவியை நீக்கா
    அழித்தலைச் சோமனோ டங்கி அருக்கன்
    வழித்தலைச் செய்யும் வகைஉணர்ந் தேனே.
  • 6. விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ னாகும்
    விரும்பிநின் றேசெயின் மெய்யுணர் வாகும்
    விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும்
    விரும்பிநின் றேசெயின் விண்ணவ னாகுமே.
  • 7. பேணிற் பிறவா உலகருள் செய்திடும்
    காணில் தனது கலவியு ளேநிற்கும்.
    நாணில் நரக நெறிக்கே வழிசெயும்
    ஊனிற் சுடும்அங்கி உத்தமன் றானே.
  • 8. ஒத்தசெங் கோலார் உலப்பிலி மாதவர்
    எத்தனை ஆயிரர் வீழ்ந்தனர் எண்ணிலி
    சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய்
    அத்தன் இவனென்றே அன்புறு வார்களே.
  • 9. யோகிக் கியோகாதி மூன்றுள தொண்டுற்றோற்
    காகத் தகுங்கிரியை ஆதி சரியையாம்
    தாகத்தை விட்ட சரியைஒன் றாம் ஒன்றுள்
    ஆகித்தன் பத்தியுள் அன்புவைத் தேனே.