ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 7. யோகம்

பதிகங்கள்

Photo

ஊழிதொ றூழி யுணர்ந்தவர்க் கல்லது
ஊழிதொ றூழி உணரவுந் தானொட்டான்
ஆழி அமரும் அரிஅயன் என்றுளார்
ஊழி முயன்றும்ஓர் உச்சியு ளானே.

English Meaning:
God is Timeless Eternity

Unless you have realized Him as Timeless Eternity
You know Him not, albeit through aeons and aeons of time;
The Gods — Hari of the Ocean bed and Aya, the Creator—
In vain have sought Him through countless vistas of Time
He is at the Pinnacle, beyond, beyond their reach.
Tamil Meaning:
யோகப் பயிற்சியால், பல ஊழிகள் செல்லவும் எடுத்த உடம்பு நீங்காது நிற்க, அதன்கண் நின்று அவ்வூழிகளைக் காண வல்லவர்க்கல்லது, ஊழிகள்தோறும் காரணக் கடவுளர்களது தொழிலிற்பட்டுப் பிறந்து இறந்து உழல்பவர்கட்கு அப்பிறப்புக்களில் பல்லூழிகள் சென்றாலும் அவர் தன்னை உணர நில்லான் சிவன். பாற் கடலில் பள்ளி கொள்பவனாகிய மாயோனும், பிரமனும்` என்று சொல்லப்பட்ட தலைமைத் தேவர்களே பல்லூழிக்காலம் தேடியும் காணவராமல் அவர்களது ஆற்றலுக்கு அப்பாற்பட்டு அவன் நின்றதே அதற்குச் சான்று.
Special Remark:
``உச்சி`` என்றது, மேல் உள்ள இடத்தை.
இதனால், இறைவன் `சரியை, கிரியை` என்பவற்றிற் போலன்றி யோகத்தில் வெளிப்பட்டு விளங்குதல் கூறப்பட்டது.