ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 7. யோகம்

பதிகங்கள்

Photo

உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்
சிந்தை உறவே தெளிந்திருள் நீங்கினால்
முந்தைப் பிறவி மூலவித் தாழுமே.

English Meaning:
Seek God Within You

You Say, ``I have realized God`
Yet you have not seen Him that is but within you;
Nandi abides subtle as fragrance within flower;
Seek Him in singleness of your thought
Then shall your darkness of Impurities vanish
The darkness that is the seed of birth and rebirth interminable.
Tamil Meaning:
உலகீர்! நீவீர், உய்திக்குக் காரணமாய்ப் பொருந்தியுள்ள பொருளை அறியவில்லை. ஆயினும், `யாம் உய்ந்தோம், உய்ந்தோம்` என்று மயங்கி உரைக்கின்றீர். மலரில் மணம்போல உம்மிடத்து உள்நின்று தோன்றக்கூடிய சிவனை, யோக நெறியால் உள்ளத்தில் பொருந்தக்கண்டு, அதனால் உம் மயக்கம் நீங்கப் பெற்றால், தொன்று தொட்டு வருகின்ற பிறவிக்கு மூல காரணமாய் உள்ள ஆணவ மலம், கீழ்ப்பட்டு அடங்கிவிடும்.
Special Remark:
`உறுபொருள் காண்கிலீர், உய்ந்தமை என்பீர்` எனவும், `மலரிற் கந்தம்` எனவும் மாற்றியுரைக்க. `யோக நெறியால்` என்பது அதிகாரத்தால் வந்தது. ஆணவம் ஆழ்தலாவது தனது சத்தி மடங்கிக் கிடத்தல். மூலவித்தாமே, மூலவித்தாகுமே` என்பன பாடம் அல்ல.
இதனால், யோகத்தால் ஆணவ சத்தி மெலிவடைதல் கூறப்பட்டது.