ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. அகார முதலாய் அனைத்துமாய் நிற்கும்
    உகார முதலாய் உயிர்ப்பெய்து நிற்கும்
    அகார உகாரம் இரண்டும் அறியில்
    அகார உகாரம் இலிங்கம தாமே.
  • 10. அன்றுநின் றான்கிடந் தான்அவன் என்றென்று
    சென்றுநின் றெண்டிசை ஏத்துவர் தேவர்கள்
    என்றுநின் றேத்துவன் எம்பெரு மான்றன்னை
    ஒன்றிஎன் உள்ளத்தி னுள்இருந் தானே.
  • 2. ஆதாரம் ஆதேயம் ஆகின்ற தெய்வமும்
    மேதாதி நாதமும் மீதே விரிந்தன
    ஆதார விந்து அதிபீடம் நாதமே
    போதா இலிங்கப் புணர்ச்சிய தாமே.
  • 3. சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம்
    சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம்
    சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம்
    சத்தி சிவமாகும் தாபரந் தானே.
  • 4. தான்நேர் எழுகின்ற சோதியைக் காணலாம்
    வான்நேர் எழுகின்ற ஐம்ப தமர்ந்திடம்
    பூநேர் எழுகின்ற பொற்கொடி தன்னுடன்
    தான்நேர் எழுந்த அகாரம தாமே.
  • 5. விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம்
    விந்துவதே பீடம் நாதம் இலிங்கமாம்
    அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய்
    வந்த கருஐந்தும் செய்யும்அவ் வைந்தே.
  • 6. சத்திநற் பீடம் தகும்நல்ல ஆன்மா
    சத்திநற் கண்டம் தகுவித்தை தானாகும்
    சத்திநல் லிங்கம் தகும்சிவ தத்துவம்
    சத்திநல் லான்மாச் சதாசிவந் தானே.
  • 7. மனம்புகுந் தென்னுயிர் மன்னிய வாழ்க்கை
    மனம்புகுந் தின்பம் பொகின்ற போது
    நலம்புகுந் தென்னொடு நாதனை நாடும்
    இலம்புகுந் தாதியும் எற்கொண்ட வாறே.
  • 8. பராபரன் எந்தை பனிமதி சூடி
    தராபரன் தன்அடி யார்மனக் கோயில்
    சிராபரன் தேவர்கள் சென்னியில் மன்னும்
    மராமரன் மன்னி மனத்துறைந் தானே.
  • 9. பிரான் அல்லன் ஆம்எனில் பேதை உலகம்
    குரால் என்னும் என்மனம் கோயில்கொள் ஈசன்
    அராநின்ற செஞ்சடை அங்கியும் நீரும்
    பொராநின் றவர்செய்அப் புண்ணியன் தானே.