ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 5. ஆத்தும லிங்கம்

பதிகங்கள்

Photo

அகார முதலாய் அனைத்துமாய் நிற்கும்
உகார முதலாய் உயிர்ப்பெய்து நிற்கும்
அகார உகாரம் இரண்டும் அறியில்
அகார உகாரம் இலிங்கம தாமே.

English Meaning:
In the Beginning was Aum

Akaram (A) as beginning, all exist
Ukaram (U) as beginning, all life exists
If Akaram Ukaram are together known
Akaram Ukaram is but Linga divine.
Tamil Meaning:
சிவன் அகார கலைக்கு முதல்வனாம் முகத்தால் அனைத்துப் பொருளுமாய் நிற்பான். உகார கலைக்கு முதல்வனாம் முகத்தால் அப்பொருள்களைச் செயற்படுத்தி நிற்பான். அதனால் அந்த இருகலைகளை உணரின் அந்த உணர்வுதானே சிவனது வடிவமாகும்.
Special Remark:
பிரணவ கலைகளில் பருநிலையை உடையன அகார கலை, உகார கலைகளேயாதலின், அவற்றை உணரும் உணர்வே முதற்கண் இலிங்கமாய் நிற்கும்` எனக் கூறினார், ``நிற்கும்`` என்பவற்றிற்கு, `சிவன்` என்னும் எழுவாய் வருவிக்க. உயிர்ப்பு - செயற்பாடு. எய்தல் - நிகழ்த்தல். சொல்லோடு பொருட்கு உள்ள ஒற்றுமை கருதி, மந்திர கலையையே பொருளாக ஓதினார்.
இதனால் மந்திர உணர்வே இலிங்கமாமாமறு தொகுத்துக் கூறப்பட்டது.