
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 5. ஆத்தும லிங்கம்
பதிகங்கள்

அகார முதலாய் அனைத்துமாய் நிற்கும்
உகார முதலாய் உயிர்ப்பெய்து நிற்கும்
அகார உகாரம் இரண்டும் அறியில்
அகார உகாரம் இலிங்கம தாமே.
English Meaning:
In the Beginning was AumAkaram (A) as beginning, all exist
Ukaram (U) as beginning, all life exists
If Akaram Ukaram are together known
Akaram Ukaram is but Linga divine.
Tamil Meaning:
சிவன் அகார கலைக்கு முதல்வனாம் முகத்தால் அனைத்துப் பொருளுமாய் நிற்பான். உகார கலைக்கு முதல்வனாம் முகத்தால் அப்பொருள்களைச் செயற்படுத்தி நிற்பான். அதனால் அந்த இருகலைகளை உணரின் அந்த உணர்வுதானே சிவனது வடிவமாகும்.Special Remark:
பிரணவ கலைகளில் பருநிலையை உடையன அகார கலை, உகார கலைகளேயாதலின், அவற்றை உணரும் உணர்வே முதற்கண் இலிங்கமாய் நிற்கும்` எனக் கூறினார், ``நிற்கும்`` என்பவற்றிற்கு, `சிவன்` என்னும் எழுவாய் வருவிக்க. உயிர்ப்பு - செயற்பாடு. எய்தல் - நிகழ்த்தல். சொல்லோடு பொருட்கு உள்ள ஒற்றுமை கருதி, மந்திர கலையையே பொருளாக ஓதினார்.இதனால் மந்திர உணர்வே இலிங்கமாமாமறு தொகுத்துக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage