ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 5. ஆத்தும லிங்கம்

பதிகங்கள்

Photo

அன்றுநின் றான்கிடந் தான்அவன் என்றென்று
சென்றுநின் றெண்டிசை ஏத்துவர் தேவர்கள்
என்றுநின் றேத்துவன் எம்பெரு மான்றன்னை
ஒன்றிஎன் உள்ளத்தி னுள்இருந் தானே.

English Meaning:
Hold Lord in Heart of Heart

``There He stood,`` ``There He lay``
—Thus the Immortals in directions eight
Adore Him;
But how shall I praise my Lord
Who in my heart`s heart ever resides.
Tamil Meaning:
உலகர் ஏனைத் தேவர்களை முதல்வராக நினைந்து தாம்கொண்ட கடவுளை `அவன் ஓரிடத்தில் நின்றான், இருந்தான்` என இவ்வாறான வடிவங்களைப் பல இடங்களில் சென்று கண்டு துதிப்பார்கள். நான் சிவபெருமானை, `என் உயிராகிய வடிவத்தில் என்றும் இருக்கின்றான்` என்று நிலையாக நின்று துதிப்பேன்.
Special Remark:
`தேவர்களை` என்னும் இரண்டன் உருபு தொகுத்த லாயிற்று. சிவபெருமானுக்குக் கிடந்த கோலம் ஓரிடத்தும் கூறப் படாமையால், ``தேவர்கள்`` என்பதனை எழுவாய் வேற்றுமையாகக் கொள்ளுதல் பொருந்துவதன்று. சிவபெருமானைச் சுட்டி நின்ற அவன் என்பது `முதற்கடவுள்` எனப் பொருள் தந்து நின்றது. முதற்கண் நின்ற ``என்று என்று`` என்றது, `இங்ஙனம் பலவாறாக` என்றபடி. `என்று` என ஒரு சொல்லாகப் பாடம் ஓதின் வெண்டளை பிழைத்தலை அறிக.
ஏனைத் தேவர்கள் உருவ மேனியைத் தவிர, `அருவுருவம், அருவம்` என்னும் மேனிகளை உடையர் ஆகாமையால், இலிங்க வடிவினராகக் கூறப்பட்டிலர். அதனால் அவர் ஆத்தும லிங்கத்தில் நிற்றலும் இல்லை` என இவ்வழிபாடு சிவநெறி நிற்பார்க்கே உரித்தாதல் கூறப்பட்டது.