
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 5. ஆத்தும லிங்கம்
பதிகங்கள்

மனம்புகுந் தென்னுயிர் மன்னிய வாழ்க்கை
மனம்புகுந் தின்பம் பொகின்ற போது
நலம்புகுந் தென்னொடு நாதனை நாடும்
இலம்புகுந் தாதியும் எற்கொண்ட வாறே.
English Meaning:
Seek the Lord within and be BlessedIn my heart He entered
In my life`s being He entered,
He poured His blessing to my heart`s fill;
Do with me the Lord seek
He enters your home, and blesses you.
Tamil Meaning:
மனத்தின் தொழிற்பாடு நிகழ்தலால் நடை பெறுகின்ற என்னுடைய உயிர் வாழ்க்கையில் அந்த மனம் உலக இன்பத்தையே மிகுவித்துக் கொண்டிருக்கின்ற நிலைமையின் இடையே சிவனது திருவருள் புகுந்து செயலாற்றத் தொடங்கின மையால், அந்த மனமும் முன்னை நிலையை விடுத்து, என்னையும், என் தலைவனையும் நினைவதாயிற்று. சிவன் எனது உடம்பையே தனது இல்லமாகக் கொண்டு என்னை ஆட்கொண்டது இம் முறைமையினாலாம்.Special Remark:
எனவே, `எனது உயிர் ஆத்தும லிங்கமானது இவ் வாற்றால்` என்றபடி. ``புகுந்து`` நான்கில் முதலாவதும், மூன்றாவதும் `புகுதலால்` என்பதன் திரிபு. ``நலம்`` என்றது. திருவருளை, ``நாடும்`` என்னும் பயனிலைக்கு எழுவாய், `அம்மனம்` என வருவிக்க. இல்லம், ``இலம்`` என இடைக் குறைந்து நின்றது. `இல்லமாகப் புகுந்து` என ஆக்கம் வருவிக்க.இதன் பின்னிரண்டு அடிகள் உயிர் எதுகை பெற்றன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage