ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. நாலாறு மாறவே நண்ணிய முத்திரைப்
    பாலான மோன மொழியில் பதிவித்து
    மேலான நந்தி திருவடி மீதுய்க்கக்
    கோலா கலங்கெட்டுக் கூடும்நன் முத்தியே.
  • 10. தூநெறி கண்ட சுவடு நடுஎழும்
    பூநெறி கண்டது பொன்நக மாய்நிற்கும்;
    மேனெறி கண்டது வெண்மதி மேதினி,
    நீணெறி கண்டுளம் நின்மல னாகுமே.
  • 2. துரியங்கள் மூன்றும் சொருகிட னாகி,
    அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி
    மருவிய சாம்பவி, கேசரி உண்மை
    பெருகிய ஞானம், பிறழ்முத்தி ரையே.
  • 3. சாம்பவி நந்தி தன்னருட் பார்வையாம்
    ஆம்பவ மில்லா அருட்பாணி முத்திரை;
    ஓம்பயில் வோங்கிய உண்மைஅக் கேசரி;
    நாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத்தி ரையே.
  • 4. தானத்தி னுள்ளே சதாசிவ னாயிடும்;
    ஞானத்தி னுள்ளே நற்சிவ மாதலால்
    ஏனைச் சிவனாம் சொரூபம் அறைந்திட்ட
    மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே.
  • 5. வாக்கும் மனமும் இரண்டும் மவுனம்ஆம்;
    வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்;
    வாக்கும் மனமும் மவுனமாம் சுத்தமே
    ஆக்கும்அச் சுத்தத்தை; யார்அறி வார்களே.
  • 6. யோகத்தின் முத்திரை ஓரட்ட சித்தியாம்;
    ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால்
    ஆகத் தகுவேத கேசரி சாம்பவி;
    யோகத்துக் கேசரி யோகமுத்தி ரையே.
  • 7. யோகிஎண் சித்தி அருளொளி வாதனை;
    போகிதன் புத்தி புருடார்த்த நன்னெறி;
    ஆகும்நன் சத்தியும் ஆதார சோதனை;
    யோகத்துக் கேசரி யோகமுத்தி ரையே.
  • 8. துவாதச மாக்கமென் சோடச மார்கக்மாம்;
    அவாஅறும் ஈரை வகைஅங்கம் ஆறும்
    தவாஅறு வேதாந்த சித்தாந்தத் தன்மை
    நவாஅக மோடுன்னல் நற்சுத்த சைவமே.
  • 9. மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை;
    ஞானத்து முத்திரை; நாதர்க்கு முத்திரை;
    தேனிக்கும் முத்திரை; சித்தாந்த முத்திரை;
    காணிக்கும் முத்திரை; கண்ட சமயமே.