ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 17. முத்திரை பேதம்

பதிகங்கள்

Photo

துரியங்கள் மூன்றும் சொருகிட னாகி,
அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி
மருவிய சாம்பவி, கேசரி உண்மை
பெருகிய ஞானம், பிறழ்முத்தி ரையே.

English Meaning:
Mudras — Sambhavi and Kechari

In the palatal place where the three Turiya states of awareness subsume,
Insert your tongue inward, and there contain it;
Thus practise the Mudras, Sambhavi and Kechari
Divine Jnana`s light to flood.
Tamil Meaning:
அரிய சொற்களையே உரைப்பதாயினும் அதனையும் துரிய நிலையில் நிற்குங்கால் எழாமல் அடங்கியிருக்கச் செய்து நின்ற `சாம்பவி, கேசரி` என்னும் இரண்டு முத்தரைகளே முத்துரியங்களும் செறிந்திருக்கும் இடமாய்` உலகியலினின்றும் நீங்குதற்கும், உண்மை ஞானம் பெருகுதற்கும் ஏதுவாய முத்திரைகளாம்.
Special Remark:
முத்துரியங்களை அடுத்த தந்திரத்தில் காண்க. அரிய உரை ... ... கேசரி`` என்பதை முதலிற்கொண்டு உரைக்க. தாரம் - நாக்கு. ``அங்கே`` என்றது முன்னர்ப்போந்த துரிய நிலையை. பிறழ்தல் - நீங்குதல் உலகியலினின்று.
இதனால், `முத்திரைகள் பலவற்றுள் சிறப்புடையன இரண்டு` என அவை எடுத்துக் கூறப்பட்டன.