
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 17. முத்திரை பேதம்
பதிகங்கள்

நாலாறு மாறவே நண்ணிய முத்திரைப்
பாலான மோன மொழியில் பதிவித்து
மேலான நந்தி திருவடி மீதுய்க்கக்
கோலா கலங்கெட்டுக் கூடும்நன் முத்தியே.
English Meaning:
Significance of MudraThe Mudra is to transcend avastas eleven,
Fix awareness on Silent Letter Pranava (Aum)
That the Way is;
And reach the Holy Feet of Nandi;
And all desires worldly quelled
You attain Mukti divine.
Tamil Meaning:
நால்வகைத் தோற்றத்து எழுவகைப் பிறப்பும் நீங்குதற் பொருட்டு நல்லோர் தங்கள் உள்ளங்களை அவற்றிற்கு ஏற்பப் பொருந்திய முத்திரைகளாகிய பல வகைப்பட்ட மொழிகளிலே பொருத்தி, அவ்வாற்றால் பரம்பொருளாகிய சிவனடிமேல் செல்லும் படி செலுத்தினால், உலக ஆரவாரங்கள் அடங்கி, மேலான வீடுபேறு உண்டாகும்.Special Remark:
``நால், ஆறு`` என்பன தொகைக் குறிப்பாய் அத்துணையான தோற்றங்களையும், பிறப்புக்களையும் குறித்தன. `நாலாகிய ஏழ்` எனவும், `முத்திரையாகிய மோன மொழி` எனவும் விரிக்க. முத்திரைகள் வாய்திறந்து பேசாமலே கருத்தை விளக்குதலால் அவற்றை ``மோன மொழி`` என்றார். பதிவித்து உய்த்தற்கு, `உள்ளம்` என்னும் செயப்படுபொருள் வருவிக்க. ``உள்ளம்`` என்றது, அதன் கண் எழும் கருத்துக்களை. ``பதிவித்து`` என்றது, `வாய்திறவாமல்` எனவும், கருத்துக்கள் `அவத்தின் பாலவாகாது, சிவத்தின் பாலவே ஆகல் வேண்டும்` எனவும் கூறியவாறு. மேலான வடு பரமுத்தி.இதனால், முத்திரைகளது பயன் கூறுமுகத்தால் அவை அடியவர்க்கு வேண்டப்படுதல் கூறப்பட்டது. வாய்திறவாமையை வேண்டியது, `அதனால் உலகியல் தொடர்பு குன்றுதல் பற்றி` என்பதனை, ``கோலாகலம் கெட்டு`` என்பதனால் கூறினார்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage