ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 17. முத்திரை பேதம்

பதிகங்கள்

Photo

மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை;
ஞானத்து முத்திரை; நாதர்க்கு முத்திரை;
தேனிக்கும் முத்திரை; சித்தாந்த முத்திரை;
காணிக்கும் முத்திரை; கண்ட சமயமே.

English Meaning:
All Mudras firm up breath

The Mudra that is Mauna
Is the Mudra for those Mukti seek;
The Mudra that is Jnana (Kechari)
Is the Mudra for those who Gurus be;
Mudra that draws nectar of Grace is the Mudra
That is Siddhanta (Sambhavi)
Mudras all firm up breath,
That Siva Truth, of yore revealed.
Tamil Meaning:
`மோன முத்திரை` எனப்படுவதாகிய ஞான கேசரி முத்திரையே உணர்வைச் சிவத்தில் நிறுத்தும் முத்திரையும், சிவா னந்தத்தைப் பெருகச் செய்யும் முத்திரையும் சித்தாந்த முத்திரையும், சிவன் சீவனைச் சதா நோக்கிக் கொண்டிருக்கும் முத்திரையும் ஆகும். அதனால் அதுவே சீவன் முத்தர்க்கும், சீவன் முத்தராய் ஆசிரியத் தன்மையை உடையவர்க்கும் ஏற்புடைய முத்திரையாம். அதுபற்றிப் பல சைவங்களும் அதனையே சிறந்த முத்திரையாகக் கண்டன.
Special Remark:
``முத்தர்க்கு முத்திரை, நாதர்க்கு முத்திரை` என்ப வற்றை, ``கண்ட சமயமே`` என்பதற்கு முன்னே கூட்டி உரைக்க. ``முத்திரை`` பலவற்றுள் முதற்கண் நின்றது எழுவாய்; ஏனைய பயனிலை. `தேன்` என்னும் பெயர், `இனிமை` என்னும் பொருட்டாக, அதனடியாக, `தேனித்தல்` என்னும் வினைச்சொல் பிறந்தது. மேற் பார்வை பார்த்தலை, `கண்காணித்தல்` என்பர். அதனை முதற் குறைத்து, ``காணிக்கும்`` என்றார். அடியவரைக் கண்காணிப்பவன் சிவனேயாதல் வெளிப்படை. ``காணிக்கும்`` என்து இன எதுகை யாயிற்று. `கண்டன` என்னும் முற்றுச்சொல் `அன்` பெறாது ``கண்ட`` என நின்றது. ``சமயம்`` என்றது தலைமை பற்றிச் சைவ சமயத்தையே குறித்தது. சைவத்தை நாயனாரே ஐந்தாம் தந்திரத்தில் பல வகையாகப் பிரித்துணர்த்தினமை அறிக.
இதனால், ஞான கேசரி முத்திரையே, முத்திரைகளுள் தலையாவது என்பது பலவற்றாலும் வலியுறுத்தி, ஒருவாறு முடித்துக் கூறப்பட்டது.