ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. அழிகின்ற சாயா புருடனைப் போலக்
    கழிகின்ற நீரிற் குமிழியைக் காணின்
    எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப்
    பொழிகின்ற இவ்வுடல் போம்அப் பரத்தே.
  • 2. உடலும் உயிரும் ஒழிவற ஒன்றின்
    படரும் சிவசத்தி தானே பரமாம்
    உடலைவிட் டிந்த உயிர்எங்கு மாகிக்
    கடையும் தலையும் கரக்கும் சிவத்தே.
  • 3. செவி மெய் வாய் கண் மூக்குச் சேர்இந்திரியம்
    அவியின் றியமன மாதிகள் ஐந்தும்
    குவிவொன றிலாமல் விரிந்து குவிந்து
    தவிர்வொன் றிலாத சராசரந் தாமே.
  • 4. பரன் எங்கும் ஆரப் பரந்துற்று நிற்கும்
    திரன் எங்கு மாகிச் செறிவெங்கும் எய்தும்
    உரன்எங்கு மாய்உல குண்டு முமிழ்க்கும்
    வரன்இங்ஙன் கண்டியான் வாழ்ந்துற்ற வாறே.
  • 5. அளந்த துரியத் தறிவினை வாங்கி
    உளங்கொள் பரம்சகம் உண்டஃ தொழித்துக்
    கிளர்ந்த பரம்சிவம் சேரக் கிடைத்தால்
    விளங்கிய வெட்ட வெளியனும் ஆமே.
  • 6. இரும்புண்ட நீர்என என்னைஉள் வாங்கிப்
    பரம்பர மான பரமது விட்டே
    உரம்பெற முப்பாழ் ஒளியை விழுங்கி
    யிருந்தனன் நந்தி இதயத்து ளானே.
  • 7. கரிஉண் விளவின் கனிபோல் உயிரும்
    உரிய பரமும்முன் ஓதும் சிவமும்
    அரிய துரியத்(து) அகிலமும் எல்லாம்
    திரிய விழுங்கும் சிவபெரு மானே.
  • 8. அந்தமும் ஆதியும ஆகும் பராபரன்
    தந்தம் பரம்பரன் தன்னில் பரமுடன்
    நந்தமை உண்டுமெய்ஞ் ஞானஞே யாந்தத்தே
    நந்தி யிருந்தனன் நாம்அறி யோமே.