ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 37. விசுவக் கிராசம்

பதிகங்கள்

Photo

இரும்புண்ட நீர்என என்னைஉள் வாங்கிப்
பரம்பர மான பரமது விட்டே
உரம்பெற முப்பாழ் ஒளியை விழுங்கி
யிருந்தனன் நந்தி இதயத்து ளானே.

English Meaning:
Three Spaces

He absorbed me in totality
As hot iron absorbs water;
Transcending Param-Para State;
He stands engulfing the Three Spaces Luminous
There He is, Nandi
That in my heart resides.
Tamil Meaning:
உலையிற்பட்ட இரும்பு தன்மேல் வீழ்ந்த நீரை மீள வெளிப்படாதபடி தன்னுள் ஒடுக்கிக் கொள்வது போல, மேலானதற்கும் மேலான பொருளாகிய சிவன், யான் அஞ்ஞானத்தை விட்டு மெய்ஞ்ஞானத்தைப் பெற்றமையால் முப்பாழிலும் முறையானே எனது சீவ போதத்தைத் தான் விழுங்கித் தான் மட்டுமே எனக்கு மேலேயிருந்தான்; என் அறிவினுள்ளும் இருந்தான்.
Special Remark:
ஈற்றில் நின்ற ``பரம்`` வாளா பெயராய் நின்றது. அது பகுதிப்பொருள் விகுதி. உரம் - மெய்ஞ்ஞானம். பெற்றது மெய்ஞ் ஞானமாகவே, விட்டது அஞ்ஞானமாயிற்று. முப்பாழ், மேலே கூறப் பட்டன. அப்பாழ்தோறும் உயிரினது அறிவு வேறுபடுதலை யறிக. ஒளி - அறிவு. ``விழுங்கி யிருந்தனன்`` என்றதனால் அவன் மட்டுமே தனித்திருந்தமை பெறப்பட்டது. ``அலைகடலில் சென்று அடங்கும் ஆறுபோல்`` 9 சீவன் சிவத்துள் சென்று அடங்கச் சிவமே ஒளி வீசி நின்றது என்றபடி. பின்னர், ``இதயத்துளான்`` என்றதனால், முன்னர் `மேலே உளான்` என்றதாயிற்று.
``இரும்பிடை நீர் என`` என்றமையால் இது நிறைவொடுக் கமாகிய முடிநிலை முத்தியைக் கூறியதாயிற்று. ``மற்றீண்டு வாரா நெறி``. பேரா இயற்கை* மீண்டு வாரா வழிஅருள் புரிபவன்``* என்றாற் போலும் திருமொழிகளைக் காண்க.