ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர
    ஏன்ற அசிபதம் இம்மூன்றோ டெய்தினோன்
    ஆன்ற பராபரம் ஆகும் பிறப்பற
    ஏன்றன மாறச் சிவாமாய் இருக்குமே.
  • 2. போதந் தனைஉன்னி பூதாதி பேதமும்
    ஓதும் கருவிதொண் ணூறுடன் ஓராறு
    பேதமும் நாதாந்தம் பெற்றியிற் கைவிட்டு
    வேதம்சொல் தொம்பத மாகுதல் மெய்ம்மையே.
  • 3. தற்பதம் என்றும் துவம்பதம் தான்என்றும்
    நிற்ப(து) அசி அத்துள் நேரிழை யாள் பதம்
    சொற்பதத் தாலும் தொடரஒண் ணாச்சிவன்
    கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.
  • 4. அணுவும் பரமும் அசிபதத் தேய்த்து
    கணுவொன் றிலாத சிவமும் கலந்தால்
    இணையறு பால் தேன் அமுதென இன்பத்
    துணையது வாய்உரை யற்றிடத் தோன்றுமே.
  • 5. தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம்
    நம்பிய சீவன் பரன் சிவ னாய்நிற்கும்
    அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம்
    செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.
  • 6. ஐம்ப தறியா தவரும் அவர்சிலர்
    உம்பனை நாடி உரைமுப் பதத்திடைச்
    செம்பர மாகிய வாசி செலுத்திடத்
    தம்பர யோகமாய்த் தான்அவன் ஆகுமே.
  • 7. நந்தி யறிவும் நடுவில் அதீதமாம்
    இந்தியம்சத் தாதி விடசிவ னாகும் நால்
    நந்திய மூன்றிரண் டொன்று நலவைந்தும்
    நந்தில் நனவாதி மூட்டும் அனாதியே.
  • 8. பரதுரி யத்து நனவும் படிஉண்ட
    விரிவில் கனவும் இதன்உப சாந்தத்(து)
    உரிய சுழுனையும் ஓவும் சிவன்பால்
    அரிய துரியம் அசிபதம் ஆமே.