ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 19. முப்பதம்

பதிகங்கள்

Photo

போதந் தனைஉன்னி பூதாதி பேதமும்
ஓதும் கருவிதொண் ணூறுடன் ஓராறு
பேதமும் நாதாந்தம் பெற்றியிற் கைவிட்டு
வேதம்சொல் தொம்பத மாகுதல் மெய்ம்மையே.

English Meaning:
Tvam-Pada is Beyond Nadanta State

Aim at Bodha State;
Discard elements and their diversities
(That Tattvas are composed of;)
And the ninety and six instruments of experience;
Transcend Nadanta State of glory;
Ascend beyond;
There indeed is the Tvam-Pada State,
The Truth Vedas speak of.
Tamil Meaning:
`அறிவாவது சடத்தின் குணமாகாது, வேறேயாம்` என்பதை உணர்ந்து பூதம் முதலிய தத்துவ வகைகளையும், அவற்றின் கூறுகளாகிய தாத்துவிக வகைகளையும் ஆகத் தொண்ணூற்றாறு கருவிகளையும் நாதமுடிவாக அவற்றின் இயல்புகளை ஆராயும் முகத்தால், `தான்` என மயங்காது விட்டொழித்து உண்மையாகவே, `தத்துவமசி` என்னும் வேதாந்த மகாவாக்கியத்தில் உள்ள `தொம்` பதப்பொருளாகி நிற்றலே ஆன்மாவின் உண்மை இயல்பாகும்.
Special Remark:
`உண்மையாக அன்றி வெறும் வாய்மொழியாக அவ்வாக்கியத்தைச் சொல்லிக்கொண்டிருப்பதில் பயனில்லை` என்பதாம். இதுவே. தசகாரியத்துள் `தத்துவரூபம், தத்துவதரிசனம், தத்துவசுத்தி ஆன்மரூபம்` என நான்காக வகுத்துக் கூறப்படுகின்றது. சிவஞானபோதத்தில், `இவ்வான்மாத் தன்னை இந்திரியத்தின் வேறாவான் காணவே``* எனப் பட்டதும் இதுவே. தொண்ணூற்றாறு கருவிகள் மேலே கூறப்பட்டன.
இதனால், முப்பாதங்களுள் ஆன்ம பதமாகிய தொம்பதப் பொருளை உண்மையாக உணருமாறு கூறப்பட்டது.