ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 19. முப்பதம்

பதிகங்கள்

Photo

தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர
ஏன்ற அசிபதம் இம்மூன்றோ டெய்தினோன்
ஆன்ற பராபரம் ஆகும் பிறப்பற
ஏன்றன மாறச் சிவாமாய் இருக்குமே.

English Meaning:
The Three States Lead to Siva-Becoming

Tvam-Padam, Tat-Padam and Asi-Padam
He who has these three states of liberation attained,
Has verily become Para-Para Himself;
No more birth shall be for him;
And when he departs
He shall indeed Siva be.
Tamil Meaning:
`துவம்` என்பதே சித்தர் மரபில், `தொம்` என மரூஉ மொழியாகக் கூறப்படுகின்றது.] `துவம்` என்னும் பதம் முன்னே எழ, அதனை அடுத்து, `தத்` என்னும் பதம் வந்து பற்ற. அதன்பின் `அசி` என்னும் பதமும் வந்து சேர, இம் மூன்றும் கூடிய கூட்டமாய் அமைந்த வாக்கியத்தின் பொருளாக ஒருவன் ஆகிவிடுவானாயின், அவன் வியாபகப்பொருளாகிய பரம்பொருளேயாவன். பின் முன்பு தான் பொருந்தியிருந்த மும்மலங்களும் நீங்கச் சிவமாகியிருப்பான்.
Special Remark:
வாக்கியம் `தத்துவமசி` என்று இருப்பினும் பொருள், `துவந்ததசி` என்பதேயாகலின் அவ்வாக்கியத்தை நாயனார் இவ்வாறே கூறுகின்றார். இதுபற்றி மேலே குறினோம்* எய்துதல் - பொருள் அனுபவமாகப் பெறுதல். வேதம், முதற் பொருளைப் பொதுவாக, `பரம்` எனக் கூறும். ஆகவே, `நீ அது ஆகின்றாய்` என்னும் வேதவாக்கியத்தால் பொது அனுபவம் உண்டாதலை ``பராபரம் ஆகும்` என்ற கூறிப் பின், சித்தாந்தம் `துவம்சிவமசி` எனக் கூறுகின்ற சிறப்புப்பொருளை எய்திச் சிவமாய் இருக்கும் எனக் கூறினார். மற்றும் இது பற்றிய சில விளக்கங்கள் மேலே* கூறப்பட்ட வற்றைக் காண்க.
இதனால், `முப்பதம் ஆவன இவை` என்பதும், அவற்றால் பெறப்படும் பயனும் கூறப்பட்டன.