ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 19. முப்பதம்

பதிகங்கள்

Photo

பரதுரி யத்து நனவும் படிஉண்ட
விரிவில் கனவும் இதன்உப சாந்தத்(து)
உரிய சுழுனையும் ஓவும் சிவன்பால்
அரிய துரியம் அசிபதம் ஆமே.

English Meaning:
Experiences in Para Turiya

Beyond the Jagrat (waking) in Paraturiya State
Is the Dream State within
That leads to Upasantha;
In the Sushupti State (of Para Turiya)
And in Turiya within Para Turiya
Is Siva reached;
Then indeed is Asi-Pada attained.
Tamil Meaning:
பரதுரியத்தில் உலகத்தை அனுபவித்தலாகிய கேவல சகல அஞ்சவத்தைகள் எஞ்ஞான்றும் நிகழாது அறவே நீங்கும். ஆயினும் நின்மல துரியத்தில் அவை ஒரோவொருகால் நிகழினும் நிகழும். ஆகவே, நின்மல துரிய `அசி` பத அனுபவமாய் நிற்பதே. `அதையும் கடந்த அனுபவம் ஆதல் இல்லை` என்பதாம்.)
Special Remark:
`பரதுரியத்து ஓவும்` என இயையும் ஓவும் - நீங்கும். ஓவுவன நனவும், கனவும், சுழுனையும்` இவை கேவல சகல அவத்தைகள்` என்பது. ``படி உண்ட`` என்றதனால் விளங்கிற்று. படி - உலகம். ``படி உண்ட`` என்பதை, ``நனவு`` என்பதற்கு முன்னர்க் கூட்டுக. விரிவு இல் கனவு - நனவுபோல விரிந்த அறிவு இல்லாத கனவு. சுழுத்தியில் அறிவு பெரிதும் ஒடுங்குதலால் அதனை, `கனவும் ஒடுங்கிய உபசாந்தம்` என்றார். ``சிவன்பால்`` என்பதன்பின், `நிகழும்` என ஒரு சொல் வருவிக்க.
இதனால், `நின்மலாவத்தை மகாவாக்கிய அனுபவமாக, பராவத்தை அதனையும் கடந்த அனுபவமாம்` என்பது கூறப்பட்டது.