ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்
    புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப்
    புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்
    புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே. 
  • 2. தானே திசையொடு தேவரு மாய்நிற்கும்
    தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்கும்
    தானே கடல்மலை யாதியு மாய்நிற்கும்
    தானே உலகில் தலைவனு மாமே. 
  • 3. உடலாய் உயிராய் உலகம தாகிக்
    கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய்
    இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி
    அடையாப் பெருவெளி அண்ணல்நின் றானே. 
  • 4. தானொரு காலந் தனிச்சுட ராய்நிற்கும்
    தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்கும்
    தானொரு காலந் தளிமழை யாய்நிற்கும்
    தானொரு காலந்தண் மாயனு மாமே.
  • 5. அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
    இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
    முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
    அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே. 
  • 6. உற்று வனைவான் அவனே உலகினைப்
    பெற்று வனைவான் அவனே பிறவியைச்
    சுற்றிய சாலும் குடமுஞ் சிறுதூதை
    மற்றும் அவனே வனையவல் லானே. 
  • 7. உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி
    வெள்ளுயி ராகும் வெளியாய் விளங்கொளி
    உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரம்
    தள்ளுயி ராம்வண்ணந் தாங்கிநின் றானே.
  • 8. தாங்கருந் தன்மையும் தானவை பல்லுயிர்
    வாங்கிய காலத்தும் மாற்றோர் பிறிதில்லை
    ஓங்கி எழுமைக்கும் யோகாந்தம் அவ்வழி
    தாங்கிநின் றானும்அத் தாரணி தானே. 
  • 9. அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி
    நணுகினும் ஞானக் கொழுந்தொன்றும் நல்கும்
    பணிகினும் பார்மிசைப் பல்லுயி ராகித்
    தணிகினும் மன்னுடல் அண்ணல்செய் வானே.