ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Paadal

  • 1. நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்
    பாங்கான பாசம் படரா படரினும்
    ஆங்கார நீங்கி அதனிலை நிற்கவே
    நீங்கா அமுதம் நிலைபெற லாமே.
  • 2. ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நீங்கிடும்
    ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்
    ஞேயத்தின் ஞேயத்தை யுற்றவர்
    ஆயத்தில் நின்ற அறிவறி யாரே.
  • 3. தானென் றவனென் றிரண்டாகும் தத்துவம்
    தானென் றவனென் றிரண்டும் தனிற்கண்டு
    தானென்ற பூவை அவனடிச் சாத்தினால்
    நானென் றவனென்கை நல்லதொன் றன்றே.
  • 4. வைச்சன ஆறாறும் மாற்றி எனைவைத்து
    மெச்சப் பரன்றன் வியாத்துவம் மேலிட்டு
    நிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால்
    அச்சங் கெடுத்தென்னை ஆண்டனன் நந்தியே.
  • 5. முன்னை யறிவறி யாதஅம் மூடர்போல்
    பின்னை யறிவறி யாமையைப் பேதித்தான்
    தன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்
    தென்னை யறிவித் திருந்தனன் நந்தியே.
  • 6. காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும்
    கோணாத போகமும் கூடாத கூட்டமும்
    நாணாத நாணமும் நாதாந்த போதமும்
    காணா யெனவந்து காட்டினன் நந்தியே.
  • 7. மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்
    மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்
    மோனங்கை வந்தூமை யாம்மொழி முற்றுங்காண்
    மோனங்கை வந்தைங் கருமமும் முன்னுமே.
  • 8. முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றன்பால்
    வைத்த கலைகாலை நான்மடங் கான்மாற்றி
    உய்த்தவத் தானந்தத் தொண்குரு பாதத்தே
    பெத்த மறுத்தோர் பிறந்திற வாரே.
  • 9. மேலைச் சொரூபங்கள் மூன்றும் மிகுசத்தி
    பாலித்த முத்திரை பற்றும் பரஞானம்
    ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்தற்ற
    மூலச் சொரூபன் மொழிஞா துருவனே.