ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 3. ஞாதுரு ஞான ஞேயம் 

பதிகங்கள்

Photo

ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நீங்கிடும்
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்
ஞேயத்தின் ஞேயத்தை யுற்றவர்
ஆயத்தில் நின்ற அறிவறி யாரே.

English Meaning:
Goal of Sivananda is Ambrosial Bliss

Do incessant seek the goal of Sivananda,
There the Primordial Pasa enmeshes you not;
When it ever envelops you,
You but throw your egoity out and stand firm;
Yours shall then be the ambrosial bliss eternal.
Tamil Meaning:
சிவஞானத்தால் சிவமாகிய ஞேயப் பொருளிலே அன்பையும், பின் அந்த ஞேயப்பொருளையும் அடைந்தோர் தம்மையும், தமது அறிவையும் ஆராய்கின்ற அச்செயலில் நிற்கும் அறிவை உடையவராகார். அதனால், அவர் ஞேயத்தை அடைந்து நிற்கும் நிலையில் ஞானம், ஞாதுரு, ஞேயம் என்னும் முப்பகுப்பு அவர்க்கு நீங்குவதாம். அது நீங்கவே, ஞேயம் ஒன்றிலேநிற்கும் ஞாதுருவுக்கு அந்த ஞேயப் பொருளிலே வீட்டின்பம் எய்துவதாம்.
Special Remark:
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, ஈற்றடியின் இறுதியில், `அதனால், என்பது, `பறம்பிற் பாரி` என்பது போல நின்றது. `ஞாதுருவுக்கு` என்னும் நான்கனுருபும், அதன் பின், `அஞ் ஞேயத்திலே` என்னும் சுட்டும், தேற்றேகாரமும் தொகுத்தல் பெற்றன. மூன்றாம் அடியில் இடைநின்ற ஞேயம், `நேயம்` என்பதன் போலி அதுவும், பின்வந்த ஞேயஞம் இரண்டாவதன் செல்வெண்ணாய் நின்றன.
சிவஞானமாவது, சிவம் ஒன்றே மெய்ப்பொருள்` என உணரும் ஞானம், அதனானே சிவம் அறியப்பட. அவ் அறிவின் வழி அச்சிவத்தின் மாட்டு அவ்வறிவனுக்கு அன்பு மீதூரும். அது மீதூர்ந்தவழி அச் சிவத்தை யன்றி அவன் வேறொன்றையும் அறியானாவன். அங்ஙனம் ஆய வழி அச் சிவத்தினது ஆனந்தம் இடையீடின்றி எல்லையில்லாமல் பெருகிநிற்கும்` என்பதனை இம்மந்திரத்தில் வகுத்துக்கூறியவாறு,
``அயரா அன்பின் அரன்கழல் செலுமே``1 என்றார் மெய் கண்டதேவரும். `ஆய் அதனில்` என்பதில் `அதனில்` என்பது ``அத்தில்`` என மருவிநின்று. `அறிவறிவாரே` என்பது பாடமன்று.
இதனால், மேற்கூறிய, ``நீங்கா அமுதம் நிலைபெறும்`` நிலை கைவரும் முறைவகுத்துக் கூறப்பட்டது.