ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 3. ஞாதுரு ஞான ஞேயம் 

பதிகங்கள்

Photo

மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்
மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்
மோனங்கை வந்தூமை யாம்மொழி முற்றுங்காண்
மோனங்கை வந்தைங் கருமமும் முன்னுமே.

English Meaning:
Mauna`s Emanations

They that have mastered the Divine
Mauna (Silence),
Shall reach the very bliss of Mukti;
And all Siddhis of themselves seek them
Into the Silent Word* would in perfection evolve;
Mastering Mauna thus,
They shall gain the power
For the five divine acts to perform
Creation, Preservation, Dissolution,
Obfuscation and Grant of Grace.
Tamil Meaning:
மௌன நிலை கைவரப் பெற்றோர்க்குப் பரமுத்தி உண்டாகும். அதற்கு முன்னே பரசித்திகள் உளவாம். நாதத்தின் பிணிப்பும் விட்டொழியும். இறைவனது ஐந்தொழில்களில் இறுதிய தாகிய அருளால் தொழிலும் நிகழ்ந்து, அவை அனைத்தும் இயற்றப் பட்டு முடியும்.,
Special Remark:
மௌன நிலையாவது தற்போதம் சிறிதும் எழாத அதீத நிலையாம். திரிபுடி அற்ற நிலையும் இதுவேயாதல் அறிக.
``மோனம் என்பது ஞான வரம்பு``3 என்னும் ஔவையார் திருமொழியும் காண்க. பரசித்திகள் மூன்றாம் தந்திரத்திற் கூறப் பட்டன. ஊமை மொழி, பிரணவம். காரண நிலையது ஆதல் தோன்ற அஃது, `ஊமை மொழி` எனப்படுகின்றது. அதுவே நாதமாதல் அறிக. முற்றுதல் - முடிவுற்று நீங்குதல். இதுவும் பாச ஞானமாய்ப் பந்தமாத லின் நீங்குதற்குரியதாயிற்று. முன்னுதல் - நினைத்தல் சங்கற்பித்தல். தன்காரியம் தோன்ற நின்ற இதற்கு, `சிவன்` என்னும் எழுவாய் வரு விக்க. இவ்வாறன்றி, `முன்னப் படும்` எனச் செயப்பாட்டு வினை யாக்கி உரைத்தலுமாம். பின்னிரண்டடிகளில் ``வந்து`` என்பவற்றை `வர` எனத் திரிக்க.
இதனால், திரிபுடி நீங்கிய நிலையினது இயல்பு வகுத்துக் கூறப்பட்டது.