
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்
பதிகங்கள்

தானே உலகுக்குத் தத்துவ னாய்நிற்கும்
தானே உலகுக்குத் தையலுமாய் நிற்கும்
தானே உலகுக்குச் சம்புவுமாய் நிற்கும்
தானே உலகுக்குத் தண்சுட ராகுமே.
English Meaning:
Primal Lord is Source of AllHe stands as the Tattvas for the world,
He stands as Sakti for the world,
He alone is the Being Uncreated (Svayambhu),
He for the world is the Moon too,
Of soft light divine.
Tamil Meaning:
ஆதித்தனே உலகிற்கு அப்பனாய் இருப்பன்; அம்மையாய் இருப்பன். சுகத்தைத் தருபவனாய் இருப்பன். இனிச் சந்திரனாய்க் குளிர்ந்த ஒளியைத் தருகின்றவனும் இவனே.Special Remark:
இதன்கண் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது. இப்பனாய் நிற்றல் கதிரவனாய் நின்றும் என்க. இந்த இருநிலைகளும் சிவம் சத்தி நிலைகட்கு உவமையாகச் சொல்லப்படுமாறு உணர்க. தத்துவம் அடிநிலை உண்மையாதலின் அது தோற்றத்திற்கு முதலாகிய அப்பனைக் குறித்தது. அதனால், ``தையல்`` என்றதும், `அம்மை` என்றதாயிற்று. ``சம்பு`` என்பது `இன்பத்தைத் தோற்றுவிப்பவன்` எனக் காரணக் குறியாய் நின்றது. சூரியனது ஒளியையே சந்திரன் பெற்றுத் தண்சுடராய் நிற்குமாறு அறிக.இதனால், அண்டாதித்தனது பெருமை பலபடியாக வகுத்துக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage