ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 18. பூரணக் குகைநெறிச் சமாதி

பதிகங்கள்

Photo

எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத்
தங்கும் சிவஞானிக்(கு) எங்குமாம் தற்பரம்
அங்கங் கெனநின் றகமுண்ட வான்தோய்தல்
இங்கே யிறந்தெங்கு மாய்நிற்கும் ஈசனே.

English Meaning:
Jnani Exists in Siva`s Pervasiveness

The heart of Siva Jnani overflows in Grace;
He sees Siva everywhere;
He feels His presence pervasive;
Fragmented may be the sky you see;
But all space it engulfs;
Like it, the Jnani,
Though rid of consciousness here,
One with Siva pervasive exists.
Tamil Meaning:
ஓரோரிடத்தில் மட்டுமே உள்ளது போலக் கட்டடங் களுக்கு உள்ளதுபோலக் காணப்படுகின்ற ஆகாயம் உண்மையில் அவ்வாறின்றி எங்கும் நிறைந்திருத்தல் போல இறைவன் ஓரோ ரிடத்தில் மட்டும் இருப்பவன் போல அங்கங்குள்ள குருலிங்க சங்க மங்களிலே இருப்பினும் உண்மையில் அவன் அந்த இடங்களை யெல்லாம் கடந்து எங்கும் இருக்கின்றான். இந்த உண்மையைத் திருவருளால் உணர்ந்து அந்தத் திருவருள் வியாபகத்திலே நிற்பவனே சிவஞானியாவான். அவன் உடல் விட்டால் அவனுக்கு சிவன் தனது எங்கும நிறைந்த நிறைவு நிலையை அனுபவமாகச் செய்து எல்லை யில்லாத இன்பத்தையும் அருளுவான்.
Special Remark:
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. `தோய்தல் போல` என உவம உருபு விரிக்க. `சிவஞானிகளுக்குத் தற்பரம் எங்குமாய்` என்பதில் `உடல் விட்டபின்` என்பது அதிகாரத்தால் வந்து இயைந்தது.
இதனால், இவ்வுலகிற்றானே சீவன் முத்தி நிலையைப் பெற்றவன் உடலை விட்டபின் பரமுத்தனாய் விளக்குதல் கூறிமுடிக்கப்பட்டது.