ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 18. பூரணக் குகைநெறிச் சமாதி

பதிகங்கள்

Photo

சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால்
தவலோகம் சார்ந்து பின்தான்வந்து கூடிச்
சிவயோக ஞானத்தால் சேர்ந்தவர் நிற்பன்
புவலோகம் போற்றுநர் புண்ணியத் தோரே.

English Meaning:
Continuity of Yoga through lives

While in the pursuit of Yoga
If Siva Yogins, holy, die,
They reach the World of Tapas
Only to this world return
And to Yoga repair;
Blessed indeed are they,
Whom the Beings Celestial praise high.
Tamil Meaning:
பிராசாத யோகமாகிய சிவயோகத்தில் நின்றவன் ஞானம் பெற்றவனோடு ஒத்தவனேயாவன். அவன் ஞானம் பெறுதற்கு முன் உடலை விட்டு நீங்கினானாயினி நேரே சிவலோகத்தையே அடைந்து அங்கு இன்பம் துய்த்தபின் மீளப் பிறந்து அந்தச் சிவ யோகத்தின் வழியே பெற்ற ஞானத்தால் மேன்மை எய்தி அத்தன்மை யாரோடே இருப்பன். அவ்வாறன்றிச் சிவலோகம் முதலியவற்றிற் செல்வோர் பசு புண்ணியம் செய்தவரே யாகையால் சிவயோகி ஆங்கெல்லாம் புகான்.
Special Remark:
சிவயோக ஞானம் - சிவயோகத்தால் பெற்ற ஞானம். `பெற்ற ஞானம்` எனவே, பெறுதல் தானே பெறப்பட்டது. `பெற்ற ஞானம்` எனவே பெறுதல் தானே பெறப்பட்டது. சேர்தற்குச் செயப்படுபொருள் வருவிக்க. `நிற்பர்` என்பது பாடம் ஆகாமை அறிக. `அவரொடு` என உருபு விரிக்க.
இதனால், மாயோகத்தைப் பெற்றவரது வாழ்வு நிறைவின் பின் நிகழ்வது கூறப்பட்டது.