ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 18. பூரணக் குகைநெறிச் சமாதி

பதிகங்கள்

Photo

ஊனமில் ஞானிநல் யோகி உடல்விட்டால்
தானற மோனச் சமாதியுள் தங்கியே
தானவ னாகும் பரகாயஞ் சாராதே
ஊனமில் முத்தனாய் `மீளான் உணர்வுற்றே.

English Meaning:
Mauna Samadhi Leads to the Unitive State

If Sivayogi gives up life,
In mauna Samadhi he enters
To seek the state unitive;
He will not in another body be born,
Nor as Jivan Mukta return
Conscious of here below;
But with Lord get united in one.
Tamil Meaning:
குறைவில்லாத ஞானத்தைப் பெற்றவன் `குறை வற்ற யோகி` என்றும் சொல்லப்படுவான். (அதற்குக் காரணம், உடம்புள்ள வரையில் அவன் உடலை விட்டு நீங்கியபின் வேறோர் உடலை எடுத்தல் இன்றியே, உடம்பில் மோன சமாதி நிலையில் தான் வேறின்றி இருந்தவாறே உடனே தான் சிவமேயாவன் ஆகவே, அவன் பரமுத்த னாதலன்றி, உலகியல் உணர்வைப் பொருந்திப் பிறப்பில் மீளான்.
Special Remark:
`தங்கி ஆகும்` என்பதில் செய்தெனெச்சம், `ஓடி வந்தான்` என்பது போல முடிக்கும் சொற்கு அடையாய் நின்றது. ``பரகாயம் சாராதே`` என்பதை முதலடியின் இறுதியில் கூட்டியுரைக்க. இவ்வேகாரம் பிரிநிலை `முத்தராய்` எனவும், `மீளார்` எனவும் பன்மைச் சொல்லாக ஓதுவன பாடம் ஆகாமையறிக. `உணர்வுற்று மீளான்` என்க.
இதனால் ஞானம் முற்றப் பெற்றோர் தம் வாழ்வின் பின்னர் எய்தும் நிலை கூறப்பட்டது.