ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 5. சரியை

பதிகங்கள்

Photo

சரியாதி நான்கும் தகும்ஞான நான்கும்
விரிவான வேதாந்த சித்தாந்தம் ஆறும்
பொருளானது நந்தி பொன்னகர் போந்து
மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே.

English Meaning:
The Four Paths Were Revealed by Nandi

The Four paths of worship
And the four states of realization they give
And the six schools of Vedanta-Siddhanta
All these are truths
That Nandi from the Golden City descending revealed
For the doubting humanity to redeem.
Tamil Meaning:
`சரியை, கிரியை, யோகம், ஞானம்` என்னும் நான்கு நெறிகளும், அவற்றில் முடிவாக உள்ள தகுதி பெற்ற ஞானம் ஒன்றிலே `ஞானத்திற் சரியை` முதலிய நான்கும் விரிந்துள்ள இவையே வேதத்தின் தெளிவாய் அமைந்த சிவாகம நெறி. அரனையே பொருளாகின்ற நிலையைச் சிவபெருமான், அறியாமை யுடைய மக்கள் அதனினும் நீங்கித் தனது ஒளி யுலகத்தை யடைந்து தன்னை வணங்கி வாழ்தற் பொருட்டு` வைத்துள்ளான்.
Special Remark:
`அதனால், இவையே வீட்டு நெறிகளாம்` என்பது கருத்து. ஏனை வேத நெறிகள் இம்மை, மறுமை என்னும் உலக நெறிகளாம் என்க. ``சித்தாந்தம்`` என்பது இங்குச் சிவாகமத்திற்குப் பெயராய், அது பற்றிக் கொள்ளப்படும் நெறிகளைக் குறித்தது. அந்நெறிகள் ஆறாவன, `பாடாண வாத சைவம், பேதவாத சைவம், சிவ சமவாத சைவம், சிவ சங்கிராந்தவாத சைவம், ஈசுர அவிகாரவாத சைவம், நிமித்த காரண பரிணாமவாத சைவம்` என்னும் அகச் சமயங்கள், இவற்றுள், இறுதியில் உள்ளது `சிவாத்துவித சைவம்` எனவும் படும். ஐக்கியவாத சைவமும் சிவாகம நெறியே யாயினும். அது அவ் ஆகமங்கள் முதன்மையாகக் கூறும் ஆணவ மலத்தைக் கொள்ளாமை யால், வேதாந்தத் தெளிவாகாது. அகப்புறச் சமயங் களோடு கூட்டி எண்ணப்படுகின்றது. சிவலோகத்தை அடைந்து வாழும் வாழ்வுகள் யாவும் பதமுத்திகளே. அகச் சமயங்கட்குப் பதமுத்திகளே பயன் என்றதனால், பரமுத்தி சித்தாந்த சைவத்தினன்றி எய்தலாகாமை அறியப் படும்.
இதனால், `சரியை முதலியவைகளே வீட்டு நெறிகள் என்பது வலியுறுத்தப்பட்டது.