ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 5. சரியை

பதிகங்கள்

Photo

நேர்ந்திடும் மூலன் சரியை நெறியேதென்
றாய்ந்திடுங் காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத்
தோர்ந்திடுஞ் சுத்தசை வத்த துயிரதே.

English Meaning:
Chariya is Breath of Suddha Saivam

``O! Kalangi! Kanja Malayaman! Kanduru!
My loved disciples, this you understand;
The practise of Chariya is basic to salvation,
And verily is the breath of Suddha Saiva
In this world below``—
Thus quotes—Mula,
Master of penances many.
Tamil Meaning:
`மூலன் உடன்பட்டுக் கூறிய சரியை நெறி யாது` என்று ஆராய்கின்ற கஞ்சமலையமானே, கந்துருவே` `பூமியில் உண்மையை ஓர்ந்து உணரச் செய்வதாகிய சுத்த சைவத்தின் உயிர் நாடியாம் நெறிகள் இவை` எனக் கூறுகின்றேன்; கேண்மின்கள்.
Special Remark:
`மூலன் நேர்ந்திடும் சரியை` என மாற்றிக் கொள்க. `கஞ்சன் முதலியோர் நாயனார்க்கு மாணாக்கர் என்பது பாயிரத் துள்ளே அறியப்பட்டது, அவர் பெயரை ஒரோவழி நாயனார் எடுத் தோதுதல் செய்வர். ``சரியை நெறி எது`` என்று எடுத்துக்கொண்டு, ``சைவத்துக்கு உயிர் கேண்மின்`` எனப் பொதுப்படக் கூறியது, `சரியையோடு பிறவற்றையும் கூறுவன்` என்றவாறு. இதனானே இவ்வதிகாரத்துள் பிறவும் பொதுப்பட உடன் வைத்துக் கூறுதல் பெறப்படும். இதனுள் பொருட்பின் நிலையும் வந்தது.
இதனால், இனிவரும் அதிகாரங்கட்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.