ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 5. சரியை

பதிகங்கள்

Photo

நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெரு மான்என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்தைக் கோயிலாக் கொள்வனே.

English Meaning:
Temple Worship Essential to Chariya

Wander you through town and villa
Seek Him through shrine and temple
Sing of Him as ``Siva, Siva, my Lord``
And thus do you offer.
worship meek,
And the Lord will make your heart His temple.
Tamil Meaning:
இதன் பொருள் வெளிப்படை.
Special Remark:
``நன்மை`` என்றது அருள் விளக்கத்தை. இதனை முன் உள்ள ``நாடு, நகரம்`` என்பவற்றிற்கும் கூட்டி, `நல்ல நாட்டையும், அதனுள் நல்ல நகரத்தையும், அதனுள் நல்ல திருக்கோயிலையும் கருதித் தேடித் திரிந்து` என உரைக்க.
``தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்`` 1
என அருளிச்செய்ததும் அறிக. நெஞ்சத்தை உடையாரது தொழிலை நெஞ்சத்தின் மேல் ஏற்றி, ``கூடிய நெஞ்சம்`` என்றார். கொள்ளுதற்கு எழுவாய், முன்னர் வந்த சிவபெருமானைச் சுட்டும். `அவன்` என்பது வருவிக்க. இங்ஙனம் விரித்துக்கூறிய இவை, `சரியை` என்பது அதிகாரத்தால் பெறப்பட்டது. `நெஞ்சத்து` என்பது பாடம் அன்று.
இதனால், சரியை ஓழுக்கமாவன சில கூறப்பட்டன.