ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 4. தக்கன் வேள்வி

பதிகங்கள்

Photo

செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்
அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்
சவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்
குவிமந் திரங்கொல் கொடியது வாமே.

English Meaning:
The Celestials who chant audibly the sacred mantra,
Use the silent Pranava to rouse the Kundalini from the Muladhara
And chanting the Pranava control the mind,
And with help of Ajapajapa rise to the heights.
Tamil Meaning:
தம் ஆசிரியர் தம் செவியிலே சொல்லக் கேட்ட மந்திரத்தை அவ்வாறே பொருளறியாது ஒப்புவிக்கின்ற அதனையே தவமாகக் கொண்ட நிலத்தேவர் (பூ சுரர்) ஆகிய அந்தணர்கள் அந்நிலை பிறழ்ந்து தக்கன் ஆணைவழியே யாகசாலை அமைத்து, அதில் நெருப்புக் குண்டம் விளைத்து, சிவபெருமானைப் புகழ்ந்து கூறும் மந்திரங்களைப் பிறரைப் புகழ்ந்து கூறும் மந்திரங்களாக மாற்றும் முகத்தால் அப்பெருமானை இகழ்ந்து, தாங்கள் நலம் பெற நினைத்து மிகச் சொல்லிய மந்திரங்கள், அவரையே கொல்கின்ற மரண மந்திரங்களாய் விட்டன.
Special Remark:
அவி மந்திரம் - அவிசை வழங்கும் இல்லம். யாக சாலை. அடுக்களை - அட்டில்; என்றது தீக் குண்டத்தை. சவித்தல் - சபித்தல்; இகழ்தல். மூன்றாம் அடியிலும், செவி மந்திரம் என ஓதுதல் பாடம் அன்று. குவி மந்திரம் - குவித்த மந்திரங்கள். ``கொடியது`` என்றது பன்மை மயக்கம். ``ஆம்`` என்றது, `அவை அன்னவாதல் இயல்பு`` என்றவாறு.
இதனால், சிவபெருமானை இகழ்ந்தவர்க்கு மந்திரங்கள் கேடு விளைத்தமை கூறப்பட்டது.