
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 4. தக்கன் வேள்வி
பதிகங்கள்

தந்தைபி ரான்வெகுண் டான்தக்கன் வேள்வியை
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்
சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே.
English Meaning:
The Heavenly Father walked in boundless furyInto the raging blaze of Daksha`s sacrifice,
And lo! as the Lord in wrath rose
Helter-skelter ran the Devas
Deranged in directions all
—Their depraved worship unconsummated.
Tamil Meaning:
தக்கனது வேள்விக் குண்டத்தில் தீ நன்கு வளர்க்கப் பட்டபொழுது அங்குக் கூடியிருந்த தேவர், யாவர்க்கும் தந்தையும், தலைவனுமாகிய சிவபிரானை இகழ்ந்த அத்தக்கனுக்கு, முதல் ஆகுதியைச் சிவபெருமானுக்குச் செய்யுமாறு அறிவு புகட்டி அவ்வாறு செய்வித்து அவ்வேள்வியை முடிக்க மாட்டாதவராய், அவனுக்கு அஞ்சி முறை திறம்பித் திருமாலுக்கு முதல் ஆகுதியைச் செய்ய இசைந்திருந்தமையால், பின் அப்பெருமான் சினந்து வீரபத்திரரை விடுத்தபொழுது அவரால் அனைவரும் அழிந்தனர்.Special Remark:
இது முதலாகக் கூறுவன பலவற்றையும் கந்த புராணத்துட் பரக்கக் காண்க. `வெந்தழல் ஊடே புறப்பட` என்பதை முதலிற் கொள்க. `குண்டத்தின்` என்பது வருவிக்க. `பிரானை` என்னும் இரண்டனுருபு தொகுத்தலாயிற்று. வெகுண்டானாகிய தக்கன் என்க. `முந்திய பூசையால்` என உருபு விரிக்க. `முடியார்` என்றது முற்றெச்சம். `கெடுதலால்` என்பது, `கெட்டு` எனத் திரிந்து நின்றது.இதனால், அச்சம் காரணமாகச் சிவநிந்தையைத் தடுக்க மாட்டாது உடன்பட்டிருந்த தேவரைச் சிவபெருமான் ஒறுத்து முறைப் படுத்தினமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage