ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
    வீணாத்தண் டூடே வெளியுறத் தான்நோக்கிக்
    காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு
    வாணாள் அடைக்கும் வழியது வாமே. 
  • 2. மலையார் சிரத்திடை வானீர் அருவி
    நிலையாரப் பாயும் நெடுநாடி யூடுபோய்ச்
    சிலையார் பொதுவில் திருநட மாடும்
    தொலையாத ஆனந்தச் சோதி கண் டேனே. 
  • 3. மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை
    மூல நிலத்தில் துயில்கின்ற மூர்த்தியை
    ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
    பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே. 
  • 4. கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
    இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
    மடைவாயிற் கொக்குப் போல் வந்தித் திருப்பார்க்
    குடையாமல் ஊழி இருக்கலு மாமே. 
  • 5. கலந்த உயிருடன் காலம் அறியில்
    கலந்த உயிரது காலின் நெருக்கம்
    கலந்த உயிரது காலது கட்டிற்
    கலந்த உயிருடல் காலமும் நிற்குமே.
  • 6. வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
    வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
    வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
    கோய்திற வாவிடிற் கோழையு மாமே. 
  • 7. வாழலு மாம்பல காலம் மனத்திடைப்
    போழ்கின்ற வாயு புறம் படாப் பாய்ச்சுறில்
    ஏழுசா லேகம் இரண்டு பெருவாய்தற்
    பாழி பெரியதோர் பள்ளி அறையே.
  • 8. நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்
    இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய்
    வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்
    குரங்கினைக் கோட்டை பொதியலு மாமே.
  • 9. அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப்
    பொருத்தஐம் பூதம்சத் தாதியிற் போந்து
    தெரித்த மனாதிசித் தாதியிற் செல்லத்
    தரித்தது தாரணை தற்பரத் தோடே.