ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது
    மன்மார்க்கம் மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம்
    பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந்
    துன்மார்க்கம் ஞானத் துறுதியு மாமே.
  • 2. மருவுந் துவாதச மார்க்கமில் லாதார்
    குருவும் சிவனும் சமயமும் கூடார்
    வெருவும் திருமகள் வீடில்லை யாகும்
    உருவும் கிளையும் ஒருங்கிழப் பாரே.
  • 3. யோகச் சமாதியி னுள்ளே அகலிடம்
    யோகச் சமாதியி னுள்ளே உளரொளி
    யோகச் சமாதியி னுள்ளே உளள்சத்தி
    யோகச் சமாதி உகந்தவர் சித்தரே.
  • 4. யோகமும் போகமும் யோகியர்க் காகுமால்
    யோகம் சிவரூபம் உற்றிடும் உள்ளத்தோர்
    போகம் புவியிற் புருடார்த்த சித்திய
    தாகும் இரண்டும் அழியாத யோகிக்கே.
  • 5. ஆதார சோதனை யால்நாடி சுத்திகள்
    மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ணொளி
    போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி
    சாதா ரணங்கெட லாம்சக மார்க்கத்தே.
  • 6. பிணங்கிநிற் கின்றவை யைந்தையும் பின்னை
    அணங்கி எறிவன் அயில்மன வாளால்
    கணம்பதி னெட்டும் கருதும் ஒருவன்
    வணங்கவல் லான்சிந்தை வந்துநின் றானே.
  • 7. வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும்
    வளங்கனி யொப்பதோர் வாய்மைய னாகும்
    உளங்கனிந் துள்ளே உகந்துநிற் பார்க்குப்
    பழங்கனிந் துள்ளே பகுந்துநின் றானே.