ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. ஆக மதத்தன ஐந்து களிறுகள்
    ஆக மதத்தறி யோடணை கின்றில
    பாகனும் எய்த்தவை தாமும் இளைத்தபின்
    யோகு திருந்துதல் ஒன்றறி யோமே.
  • 2. கருத்தின்நன் னூல்கற்றுக் கால்கொத்திப் பாகன்
    திருத்தினும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயா(து)
    எருத்துற ஏறி யிருக்கிலும் ஆங்கே
    வருத்தினும் அம்மா வழிநட வாதே.
  • 3. புலம்ஐந்து புள்ஐந்து புள்சென்று மேயும்
    நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்து
    குலம்ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்
    உலமந்து போம்வழி ஒன்பது தானே.
  • 4. அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன
    அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சக மேபுகும்
    அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால்
    எஞ்சா திறைவனை எய்தலும் ஆமே.
  • 5. ஐவர் அமைச்சருள் தொண்ணூற் றறுவர்கள்
    ஐவர்உம் மைந்தரும் ஆளக் கருதுவர்
    ஐவரும் ஐந்து சினத்தோடே நின்றிடில்
    ஐவர்க் கிறையிறுத் தாற்றகி லோமே.
  • 6. சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறும்
    சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குள
    வெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையும்
    கொல்லநின் றோடும் குதிரையொத் தேனே.
  • 7. எண்ணிலி இல்லி யுடைத்தவ் விருட்டறை
    எண்ணிலி இல்லியோ டேகிற் பிழைதரும்
    எண்ணிலி இல்லியோ டேகாமை காக்குமேல்
    எண்ணிலி இல்லத்தோர் இன்பம தாமே.
  • 8. விதியின் பெருவலி வேலைசூழ் வையம்
    துதியின் பெருவலி தொல்வான் உலகம்
    மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை
    நிதியின் பெருவலி நீர்வலி தானே.