
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 32. ஐந்திந்திரியம் அடக்கும் அருமை
பதிகங்கள்

ஆக மதத்தன ஐந்து களிறுகள்
ஆக மதத்தறி யோடணை கின்றில
பாகனும் எய்த்தவை தாமும் இளைத்தபின்
யோகு திருந்துதல் ஒன்றறி யோமே.
English Meaning:
Do Not Delay to Control SensesFive are the elephants (Senses)
That are in rut
Their rut increasing
They do not to the (Divine) Post remain tied;
As the mahout (Jiva) tires,
And the elephants (Senses) too, get their energy exhausted,
Then they turn to Yoga;
Why this way (they delayed) we know not!
Tamil Meaning:
இம்மந்திரம் ஒட்டணி. ஐந்து களிறுகள். ஐம்புலன் களின் மேல் செல்லும் ஐந்து அவாக்களையுடைய மனம் - மனம் ஒன்றாயினும் அவா வகையால் ஐந்தாயிற்று. ஆக மதத்தமை. மிகவும் மதம் கொண்டமை. அஃதாவது அவா மிக மிகுத்தமை. தறி - திருவருள். பாகன் - உயிர். அவன் எய்த்தமை - அந்த மனத்தை அவாக் கொள்ளாதவாறு தன் முயற்சியாலே தான் அடக்கி அடக்கிப் பார்த்து இயலாது இளைத்தமை. இனிக் களிறுகள் இளைத்தமை - மனம்தான் அவாவிய புலன்களை அடைந்து அடைந்து நிறைவுபெற விரும்பி, நிறைவு கூடாமையால் வெறுப்புற்றமை. இந்நிலையிலே அந்த மனம் திருந்தி நிறைவு பெறுதற்கு வழி சிவயோகத்தைத் தவிர வேறொன்றில்லாமை அறியப்பட்டது.Special Remark:
ஆதல் - மிகுதல். அஃது இங்கு அளவின் மிகுதலைக் குறித்தது. இரண்டாம் அடியில், `மதத்தால்` எனவும், ஈற்றடியில் `யோகினால்` எனவும் உருபு விரிக்க. ``யோகு`` என்பது தமிழ் முறையில் முதனிலைத் தொழிற்பெயராய் வரும். யோகம், இங்குச் சிவயோகமேயாம். `திருந்துதல்` என்பதன்பின் `ஒழிய` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது. `ஒன்றையும்` என உருபும், இழிவு சிறப்பும்மையும் விரிக்க. `ஐந்திந்திரியங்களை அடக்குதல் சிவ யோகியர் சிலராலல்லது ஏனையோரால் கூடாமையும், சிவயோகத்தை எய்துதல் பலர்க்குக் கூடாமையும் நோக்கின் ஐந்திந்திரியங்களை அடக்குதற்கண் உளதாய அருமை விளங்கும் என்பது கருத்து.இதனால், இங்கு எடுத்துக் கொண்ட பொருள் முதற்கண் இனிது புலப்படுத்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage